வெள்ளி, 27 நவம்பர், 2009

எங்கள் குட்டி தேவதை



இந்த பாடல் கேட்கும் போது எங்கள் சுபிக்ஷா பாப்பாவின் நினைவு வரும்.
சுபிக்ஷா என் அக்காவின் குழந்தை
அவளுக்கு ஒன்றரை வயது இருக்கும் போது என் அக்கா அவளுக்கு இந்த பாடல் சொல்லி தந்தாள். அப்போது அவள் பட்ட பாடு இப்போது நினைத்தாலும் எங்களுக்கு சிரிப்பும், சந்தோசமும் தான் வருகிறது.

அக்கா: அம்மா இங்கே வா வா
பாப்பா: அம்மா தான் இங்க இருக்கீங்க. இன்னொரு அம்மாவை கூப்பிடணுமா?
அக்கா இந்த வரியிலே அதிர்ச்சி ஆகிட்டாள். பின் விளக்கம் சொல்லி கொடுத்து அடுத்த வரிக்கு வந்தாள்

அக்கா: ஆசை முத்தம் தா தா
பாப்பா: நிஜமாலும் முத்தம் கொடுத்தாள்

அக்கா: இலையில் சோறு போட்டு
பாப்பா: நிஜமாலும் போட போகிறார்கள் என்று நினைத்து எனக்கு சோறு வேண்டாம் வேண்டாம் ன்னு ஒரே சிணுங்கள்

அக்கா: ஈ யை தூர ஓட்டு
பாப்பா: எங்க மா ஈ ? இங்கே காட்டு. என் கண்ணுக்கு தெரியலையே...

ஒவ்வொரு முறையும் விளக்கம் சொல்லி, சொல்லிகொடுத்த அக்காவிற்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. அன்றைய பாடம் அத்தோடு முடிந்தது. எங்கள் குட்டி தேவதை எப்போதும் அக்காவிடம் பாடம் படிக்கும் போது இப்படி தான் எதையாவது கேட்பாள் அல்லது அடம் பிடிப்பாள். இப்போது பேபி School க்கு(Pre K.G) போயி நிறைய Tamil/English பாட்டு கத்துகிட்டு எங்களுக்கு போன்ல பாடி காட்டுறா.

வருங்கால IAS / IPS / Doctor ஒருத்தங்க எங்க வீட்டுளும் இருக்காங்கப்பா.

புதன், 14 அக்டோபர், 2009

Bonus பிரச்சனை

1. சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளி சாக்கடை மீதிருக்கும் கல்லை எடுத்துவிட்டு பின் அவர்க்கு சன்மானம் தரும் கடை/வீடு முன் இருக்கும் கல்லையும், சாக்கடை கழிவுகளை மட்டும் சரி செய்கிறார்.

2. கேட்ட பணம் தருபவர்க்கே தன் கடமையை செய்கிறார் மின்வாரிய ஊழியர்கள்

3. பாஸ்போர்ட், பென்ஷன், போன்றவைகளை தகுந்த சன்மானம் பெற்றுக்கொண்டே உரியவர்களிடம் கொடுகின்றனர் அஞ்சலக ஊழியர்கள்

4. 'கொள்முதல் கணக்கை குறிப்பிட்ட தேதியில் சமர்பிக்காவிட்டால் அதிக பணம் கட்டவேண்டி வரும்' என்ற நோட்டீஸ்-யை கொடுத்துவிட்டு அதை கொண்டுவந்ததற்காக பணம் கேட்டு தலை சொரிகிறார் விற்பனை வரி அலுவலக(sales tax office staff) ஊழியர்கள்

5. எந்த சான்றிதழுக்கும் பணத்தை பெற்றுக் கொண்டே தன் கடமையை செய்கிறார் Commercial Tax Officer.

6. கார்ப்பரேஷன் வரி நோட்டீஸ் கொடுக்க வரும் ஊழியர்

7. Traffic signal-லில் நின்று கொண்டு அநியாயமாக பணம் கறக்கும் போக்குவரத்து காவலர்கள்

இவர்களை போல் இன்னும் பலர்.

இப்படி பணத்தை பெற்று கொண்டே வேலை செய்யும் இந்த அரசாங்க பிட்சைக்காரர்கள் தீபாவளிக்கு உரிமையுடன் ஒவ்வொரு வீடு மற்றும் கடைகளுக்கு வந்து பண்டிகை பணம் கேட்கிறார்கள்.
இவர்களுக்கு பயந்து கொண்டே தீபாவளிக்கு இரண்டு நாள் கூடுதலாக விடுமுறை கொடுக்கின்றனர் பல வியாபாரிகள்.

இவர்களுக்கு பணம் கொடுப்பது சரியா?
இவர்களை எப்படி சமாளிப்பது?

ஒருமுறை ஒருவரிடம் அல்லது நான்கு பேரிடம் கூட 'பணம் கொடுக்க முடியாது' என்று சொல்லலாம். தொடர்ந்து வெட்கமில்லாமல் படையெடுக்கும் இவர்களை சமாளிப்பதை பற்றி யாருக்காவது தெரிந்தால் எங்களுக்கும் சொல்லி உதவுங்களேன்.

செவ்வாய், 6 அக்டோபர், 2009

தமிழரசி அக்காவிடம் சுட்டது

அன்புக்குரியவர்கள் : அனைவரும்

ஆசைக்குரியவர் : காதலன்

இலவசமாய் கிடைப்பது : அறிவுரைகள்

ஈதலில் சிறந்தது : குறிப்பறிந்து உதவுவது

உலகத்தில் பயப்படுவது : பல்லிக்கு தான்

ஊமை கண்ட கனவு : ஊனமாகிய எண்ணங்கள்

எப்போதும் உடனிருப்பது : உளறல்கள்

ஏன் இந்த பதிவு : நீண்டநாள் ஆசை

ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐஸ்

ஒரு ரகசியம் : மனதோரம் மட்டும்

ஓசையில் பிடித்தது : இராணுவ வீரர்களில் அணிவகுப்பு ஓசை

ஔவை மொழி ஒன்று : ஆறுவது சினம்

(அ)ஃறிணையில் பிடித்தது : தமிழரசி அக்காவிடம் (இக்கேள்விகளை) சுட்டது

திங்கள், 7 செப்டம்பர், 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்



இந்த அற்புத நாளில்(September 8th) பிறந்து,

சிறந்த அறிவாளியாகவும், தியாக சுடராகவும், புரட்சியின் சிகரமாகவும்,

நற்குணங்களின் இருப்பிடமாகவும் விளங்கும் அனைவருக்கும்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

திருச்சியை ரசிப்போம் வாங்க - ஸ்ரீரங்கம் - அழைப்பு 3


ஓம் நமோ நாராயண

பூ என்றால் அது தாமரை மலரையும்
கோவில் என்றால்
சைவத்திருக்கு (சிவன்) சிதம்பரமும்
வைணவத்திற்கு (பெருமாள்) திரு அரங்கத்தையும் குறிக்கும்.
வைணவ த்திருத்தலங்களுக்கெல்லாம் முழு முதன்மையானது ஸ்ரீரங்கம் ஆகும். அதனால் தான் இங்கு இருக்கும் பெருமாளை 'பெரியவர்' என்றே அழைப்பர் வைணவர்கள்.

கோபுர வாசல்கள் மொத்தம் ஏழு. முதல் மூன்று வாசல்களில் வீதிகள், குடியிருப்புகள், கடைகள் இருக்கும், அடுத்த நான்கு வாசல்களும் கோவிலுக்கு உரித்தானவை.


இக்கோவிலுக்கு மொத்தம் 21 கோபுரங்கள் இருக்கின்றன.


அதில் முதல் கோபுரமான ராஜா கோபுரம் ஆசியாவிலே இரண்டாவது மிக பெரிய கோபுரம் என்ற பெருமைக்குரியது. இது 17 ம் நூற்றாண்டிலே கட்ட ஆரம்பிக்கப் பட்டாலும் 1987 ம் ஆண்டு தான் கட்டி முடிக்கப் பட்டது.இக்கோபுரத்தீன் கீழ் நிற்கும் போதும் குளிந்த காற்று நம்மை வருடிச் சென்று மனதுக்கும், உடலுக்கும் ஒரு புத்துணர்வு கொடுக்கும் நிலை ஆனந்தமானது.


அக்காலத்தில் மன்னர்கள் ஏன் பெரிய பெரிய கோவில்களை கட்டி, அதனை பராமரிக்க பல ஏக்கர் நிலங்களையும் விட்டு சென்றனர்?
1. அக்காலத்தில் சிற்பம், ஓவியம், இயல், இசை, நாடகம், போன்ற பல கலைகளுக்கு புகலிடமாக கோவில்கள் இருந்தன. அதனால் தான் கோவிலுக்கு போகும் போது குளித்துவிட்டு சுத்த பத்தமா, நல்லா ஆடைகள் அணிந்து போகணும் ன்னு சொல்லுவாங்க. ஏனெனில் பல கலைகளுக்கும் புகலிடமாக இருக்கும் இடத்தில் நம் உடல் துர்நாற்றத்தினால் கலைகளை ரசிக்க வருபவர்கள் பாதிக்க கூடாதுன்னு தான் அப்படிப்பட்ட பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் நாம் இறைவன் அருள் பெற மனம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும்

சிறிய கோவில்களே கலைகளுக்கு புகலிடமாக இருந்த போது ஸ்ரீரங்கம் இருந்திருக்காதா?
கட்டுத் தரிக்கும் கவிபாடும் திறன் கொடுத்த நம் கம்பர் இங்குதான் தனது அழியா காவியமான கம்ப ராமாயணத்தை அரங்கேற்றினார். அந்த மண்டபம் இதோ..


இந்த மண்டபத்தை பார்க்கும் போது கம்பனின் புகழ் தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக 'எப்பேர்ப்பட்ட கவிஞன் தான் அழியாக் காவியத்தை அரங்கேற்றிய இடம்' என்ற நினைவு வரும். அப்போது கைகள் தானாக அவ்விடத்தை தொட்டு பார்க்க ஆசைப்படும்

கலைகளுக்கு புகலிடமாக கோவில்கள் இருந்தன
கலைகளுக்கு தலைவனாக இறைவன் இருக்கிறான்
.

அதனால் தான் இன்னும் நம் தமிழ் இசை அமைப்பாளர்கள்(A.R. ரகுமான், இளையராஜா, விஸ்வநாதன்..), பாடகர்கள்(SPP, ஜேசுதாஸ், நித்யஸ்ரீ ...) பலரும் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர்.

சனி, 29 ஆகஸ்ட், 2009

திருச்சியை ரசிப்போம் வாங்க - அழைப்பு 2

எத்தனை வாய்க்கால்கள், குளங்கள், ஆறுகள். இவற்றில் எல்லாம் நீர் இருக்கும் போது எவ்வளவு அழகு எங்கள் திருச்சி.

இத்தனை புகழுக்கும் சொந்த காரர் ஒருவரே. அவர் தான் மாமன்னர் கரிகாலச் சோழர். கல்லணையை கட்டியவர் நாடு சிறப்புற நீரை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல் படுத்தியவர். அப்போது உறையூர் தான் சோழ நாட்டின் தலைநகராக இருந்தது.

மேலும் அக்கால மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய பெரிய கோவில்களையும், அதில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளையும் இந்நாளில் யாரால் செய்ய முடியும்? எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியா புகழுடைய கோவில்கள் அல்லவா அவைகள்? தலை நகரத்திற்குரிய அழகு என்றும் அழியாத அழகாய் இன்றும் அக்கோவில்கள் திருச்சியை அழகு படுத்திகொண்டு இருக்கின்றன.

ஆறுகளையும், குளங்களையும் வெட்டியதும் கோவில்கள் கட்டியதும் சோழ மன்னர்களாக இருந்தாலும், பின்னாளில் வந்த பல மாமன்னர்கள் அதாவது, பாண்டிய மன்னர்களும், பல்லவ மன்னர்களும் கோவில்களை மேலும் பெரியதாகவும், சிறப்புடையதாகவும் வளர்த்தனர் என்பது இக்கோவில்களில் உள்ள தூண்களையும் , சிற்பங்களையும் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில்களை பற்றி இங்கு பார்ப்போம்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

திருச்சியை ரசிப்போம் வாங்க - அழைப்பு 1


நீங்க ஒரு ஆன்மீகவாதியாகவோ , ரசனையாளராகவோ இருந்தால் எங்க ஊர் உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி! காவேரி!

பூவர் சோலை மயிலாடப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி! காவேரி!
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம், நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே
அறிந்தேன் வாழி! காவேரி!

பழம்பெரும் காலத்தில் சிலப்பதிகாரத்தில் பாட பட்ட பாடல் இது.

காவிரி பெண் கன்னி பருவம் வந்ததும் தன் காதலனோடு சேர குதுகலத்துடனும், பூரிப்புடனும் வாருவாள். அப்போ அவளுக்கு குயில்கள் காதல் பாட்டிசைத்தும் செவிலி தாய்மார்களான புன்னை மரங்களும், கடம்ப மரங்களும் மஞ்சள், சிவப்பு வண்ண மலர்களை சூடி, பச்சை பட்டுடித்தி, பல மணங்களால் அவளை மேலும் அழகு படுத்தியும் காவிரி பெண்ணை சந்தோசப்படுத்தி சந்தோசப்பட்டனர். சந்தோஷம் அவளுக்கு மட்டும் தானா? அவள் போகும் இடமெல்லாம் பஞ்சம் என்னும் பகைவனை அழித்துக் சென்றதால் மக்களும் அல்லவோ சந்தோசத்தில் இருந்தனர்.

அதனால் தானே சுந்தர சோழ மன்னரின் செல்வப் புதல்வியும், ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி குந்தவைக்கூட
'இந்தப் பொன்னி நதி பாயும் சோழ நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குப் போகப் பிடிக்கவேயில்லை! எனக்கு திருமணம் ஆனாலும் நான் சோழ நாட்டை விட்டு போவதில்லை' என்று சபதம் எடுத்துக் கடைசிவரை அதுபோலவே வாழ்ந்து காட்டினாள்

இன்று அந்த செவிலி தாய்மார்களை நாம் கொன்றதலோ என்னவோ காவிரி பெண்ணுக்கு எங்கள் ஊர் பக்கம் வர பிடிக்காமல் மேகமாகி நேரிடையாக தன் மணாளனோடு சேர்கிறாள்.

என்ன இருந்தாலும் அவள் தாய் அல்லவா? அதான் வருடத்தில் சில நாட்கள் மட்டுமாவது வந்து நம்மை வாழ வைக்கிறாள்.

ஆனாலும் இன்றும் திருச்சியில் திரும்பிய பக்கமெல்லாம் ஆறு, வாய்க்கள்,குளங்கள், குட்டை கள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் அழகு மழைகாலங்களிலும், காவிரி தாயின் வருகையின் போது மட்டுமே தெரிகின்றன.

மற்ற நேரங்களில் தாயில்லா குழந்தைகளை போல அழுக்காகவும், கவனிப்பார் அற்றும் இருக்கும்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

இயற்கையை பாதுகாப்போமா?

நாம் இன்று இருக்கும் சூழ்நிலையில் மரம் வெட்டுவது குற்றம், மணல் அள்ளுவது குற்றம் என்று எல்லாம் பேசுகிறோம். இவற்றை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் மரம் வெட்டுபவரையும், மணல் அள்ளுபவரையுமே குற்றம் சொல்லுவதும் குற்றம்.

ஏனெனில் மரம் வெட்டுபவரோ, மணல் அள்ளுபவரோ, அல்லது அவற்றை விற்பவர்களோ அவற்றை எல்லாம் தங்கள் சொந்த உபயோகத்திருக்கே பயன் படுத்துவது இல்லை. இந்த திருட்டு மணலும், மரமும் எங்கு போகின்றன? கடைசியாக தனி மனித விருப்பத்திற்கே வந்தடைகிறது.

இப்பல்லாம் எல்லாரும் தனி வீடு, அதுவும் மாளிகை போல வீடு கட்டி அதில் வசிக்கவே ஆசைபடுகின்றனர். உங்கள் அனைவருக்கும் தெரியும். மணலோ, மரமோ இல்லாமல் வீடு கட்ட முடியாது. அதே போல மரத்திற்கு பதிலாக எத்தனையோ மாற்று பொருள்கள் வந்தாலும் மர பொருட்களையே(கட்டில், டேபிள், etc..) மனிதன் விரும்பிகிறான்.

மரம், மணல் பற்றிய குற்றம் குறைய வேண்டுமானால் முதலில் இந்த தனி மனித குணம் மாற வேண்டும்.

1. எளிய வீட்டில் வசிக்க அனைவரும் முன்வர வேண்டும்.

2. மரப் பொருட்களை பயன் படுத்துவடை தவிர்க்க வேண்டும்.

இதை ஒவ்வருவரும் பின் பற்றினால் மணலும், மரமும் வாங்க ஆள் இல்லாமல் அவைகள் அந்த அந்த இடங்களிலே மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால் இது ஒருநாளும் நடக்காத செயல். சிறிது சிறிதாக பணம் சேர்த்து பெரிய வீடு கட்டும் ஒருவரிடம் உங்களால் தான் மரம், மண் வளம் பாத்திப்படைகிறது என்றால் அருவாள் தூக்கி கொண்டு வெட்ட வருவான்.

மேலும் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூட்டு குடும்ப முறை மாற்றமும், சொந்த வீடு கனவும் பெருகுகிறது. இதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல.

என்னால் முடிந்தது என் கொள்கைகளின் பட்டியலில் மேற்சொன்னவற்றை சேர்த்து கொண்டது தான். (அதாவது எளிமையே இனிமை) என் வாழ்க்கை துணையும் இதேபோல இருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

எதற்கு இந்த தலைப்புக்கள்?

தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் ஓட்டு வாங்க இல்லாத சேட்டை செய்வார்கள். இந்த பதிவுலகத்திற்கு திடீரென்று என்ன வந்துவிட்டது? ஆளாளுக்கு ஆன்மிகம், சமயம்,சம்பிரதாயம், கடவுள் என்ற ஒரு உணர்வு பூரணமான தலைப்பை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார்கள்?

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வில் பல அற்புத அனுபவங்களை உணர்ந்து இருப்பார்கள். ஆதலால்தான் கடவுள் இல்லை என்றும், அவரை கேலியாக பேச ஆரம்பித்தால் எங்களால் தாங்க முடியாமல் துள்ளி குதித்து பேச ஆரம்பிப்போம்.

ஆன்மீகவாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை வாங்குவர், சிவன், சக்தி, பெருமாள், பிள்ளையார், முருகர், etc

நான் சிவ பெருமானை முழுதாக நம்புபவள். ஈசனை வணங்குவோர்க்கு கிடைக்கும் ஒரு அற்புத சக்தி உள்ளுணர்வு அதாவது ஒரு செயல் நடப்பதற்கு முன்னரே இது சரியாக நடக்கும், இது தவறாக நடக்கும் என்றும், ஏதோ ஒரு நல்லது /கெட்டது நடந்துள்ளது, நடக்க இருக்கிறது என்பது மனது கூறும். இதனை உள்ளுணர்வு / Intuition என்பர்.

பொதுவாக யோகா செய்பவர்க்கும், எதையும் ஆழ்ந்து தெளிவாக நடைமுறைக்கு ஏற்ப முடிவெடுப்பவருக்கும் இந்த உள்ளுணர்வு ஓரளவு இருக்கும். ஆனால் சிவ பெருமானை வணங்கும் பெரும்பாலனவர்க்கு இந்த அபூர்வ உள்ளுணர்வு எளிதாக கிடைக்கிறது.
நடக்கும் நடக்காது என்பதை ஓரளவு எங்களுக்கு முன்னரே தெரிந்து விடுவதால் முடிவுகள் எப்படி இருந்தாலும், அல்லது எது எப்படி நடந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்ள முடிகிறது.
மேலும் அதனை நல்ல முறையில் பயன்படுத்தும் வரை உள்ளுணர்வு நம்மிடமே இருக்கும்

என் தோழி மகேஸ்வரி. அவர் சிவ பெருமான் மீது அதீத பக்தியோடு இருப்பவள். அவள் வசிப்பது ஒரு பக்க பட்டிகாடு. அவள் அப்பா சிவன் கோவில் பூசாரி.
ஒருமுறை செமெஸ்டர் (Accountancy paper)எக்ஸாம் போது அவள் என்னிடம் Exam Hall போவதற்கு 15 நிமிடத்திற்கு முன் ஒரு 12 மார்க்ஸ் கேள்வியை காண்பித்து இதை படி என்றால். நானும் படித்தேன். அதிசயம் அந்த கேள்வி எக்ஸாம்ல் வந்து. அந்த பரிச்சையில் நா எடுத்த மதிப்பேன் 42! (pass marks is 40). அவளிடம் எப்படி உனக்கு இது தெரியும் என்றால் அவள் சொன்ன ஒரே பதில் உள்ளுணர்வு. Avarage மாணவியாக இருந்தவள் இன்று CA முடித்து ஆடிடோர்-ஆக இருக்கிறாள். இதற்கு அவள் சொல்லுவது 'எல்லாம் அவன் செயல்'. இது போல என் வாழ்க்கையிலும் பல பல அனுபவங்கள் இருக்கு. ஒவ்வொரு ஆன்மீகவாதிகள் வாழ்க்கையிலும் பல பல அதிசயங்கள் நடந்து இருக்கு.

இந்த உணர்வில் லயித்தவர்கள் சிலர் வெளியில் வர விருப்பம் இல்லாமல் அந்த அதிசயத்தில் கலந்து விடுவர். அதாவது சிவ சித்தராகி விடுவர். (நாத்திகர் பாசையில் பைத்தியங்கள்)

ஆனால் இது எதுவுமே நடக்காத/உணராத நாத்திகவாதிகள் இறைவன் இல்லை. அவன் கல், காளான் என்று எல்லாம் பேசுகிறார்கள்!!!!! ??????

நாத்திகவாதிகளுக்கு கடவுள் இல்லை என்று சொல்வதிலும், எங்களுடன் விவாதம் என்ற பெயரில் எல்லாம் தெரிந்தவர்கள் போல பேசுவதிலும் ஒரு சந்தோசம்.

மேலும் வால் பையனின் விவாதத்தில் கலந்து கொண்டதிலிருந்து நா தெரிந்து கொண்டவை,

1. இறை உணர்வை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இன்னும் இவர்களுக்கு வரவில்லை. (அப்படி விளக்க போனால் அது விவாதமாகி எனது அன்றைய நாள் வேலைகளும், படிப்பும் கேட்டு போகிறது)

2. அப்படியென்றால் கடவுள், ஆன்மீக போன்றவற்றை எப்படி இவர்களுக்கு தெரியவைப்பது என்றால்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில்தான் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் அது போல சூழ்நிலை வரும். அப்போது அவர்களே அதை தெரிந்து கொள்வர்.
அதுவரை அவர்களை பொறுத்தவரை நான் (ஆன்மீகவாதி) பைத்தியமாகவே இருந்துவிட்டு போறேன்.

என் பதிவுலக நண்பர்களே இனி யாரும் என்னை ஆன்மிகம் சார்ந்த விவாதத்திருக்கு அழைக்க வேண்டாம்.

சனி, 1 ஆகஸ்ட், 2009

நம் கலாச்சாரம் ஒரு நாளும் அழியாது

18.07.09 அன்று நானும் என் அம்மாவும் என் அக்கா வீட்டிற்க்கு (ஈரோடு) சென்றோம். பிறகு அங்கிருந்து கர்நாடக எல்லையில் இருக்கும் மாதேஸ்வரன் மலைக்கு சென்றோம். மிகவும் அற்புதமான இயற்கை சூழலில் இருக்கும் அந்த மலை கோவிலுக்கு எங்க ஊர்காரர்கள் (ராசிபுரம், சேலம், ஈரோடு) பல காலமாக (கிட்ட தட்ட 60,70 வருடங்களாக) வருடம் தவறாமல் போயி வருகிறார்கள். என் அக்காவின் மாமனார், மாமியார், என் அம்மா என அனைவரும் அவர்கள் சிறு வயதில் அவர்களின் தாத்தா, பாட்டியுடன் நடந்தே அந்த காட்டு மலை பாதையில் கோவிலுக்கு போயி இருக்கிறார்கள். ஒரு வார பயணமாக இருக்குமாம். இடையில் சிங்கம், புலி வந்தால் 'மாதையா காப்பாத்து , மாதையா காப்பாத்து' ன்னு கத்துவாங்கலாம். இவர்கள் கத்தலை கேட்டு (சகிக்கமலோ என்னவோ!!!) புலி, சிங்கம் எல்லாம் ஓடிடுமாம். (அப்புறமா தான் தைரியமா நம்ப வீரப்பன் அண்ணன் வந்தாங்க) சக்தி வாய்ந்த அந்த தெய்வத்தை தரிசித்துவிட்டு திரும்பும்போது மேட்டூர் போனோம்.

அங்கு நம் ஊர் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்கூடாக பார்த்தேன்.. அன்று ஞாயிற்று கிழமை ஆதலால் ஊர்க்காரர்கள் எல்லாம் அரிசி, மளிகை பொருட்களை எடுத்து வந்து அங்கேயே மீன் வாங்கி குழம்பு வச்சு சமைத்து அந்த இடத்தையே நார வச்சு இருந்தார்கள். (வாரம் வாரம் இவர்கள் செய்யும் இந்த அட்டகாசத்தையும் தாண்டி பூங்காவை நன்றாக பராமரித்து வரும் பணியாளர்களுக்கு பாராட்டுகள்). அடுத்து அங்கு இருக்கும் உயிரியல் பூங்கா (zoo) வில் இருக்கும் பாம்பை பார்த்து பக்தியோடு இவர்கள் போட்ட காணிக்கை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருது. அதுவும் சதா பாம்புக்கு காசாகவும், மலைப் பாம்புக்கு ரூபாய் நோட்டுக்கலாகவும் போட்ட இவர்களது பக்தியை என்ன வென்று சொல்லுவது???


இதெல்லாம் பார்த்த பிறகு நம் நாட்டு பண்பாடு கலாச்சாரம் கேட்டு போச்சு ன்னு சொன்னவங்க மேல கோபம் கோபமா வந்துச்சு. இப்படி பட்ட மனுசங்க இருக்கிற வரை நம் கலாச்சாரம் ஒரு நாளும் அழியாது.

வியாழன், 16 ஜூலை, 2009

வாழ்க்கையின் பொருள் என்ன? நாம் வந்த கதை என்ன?



சந்தோஷ் அண்ணா இறப்பிற்கு பிறகு வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நாம் வாழ்வதின் நோக்கம் என்ன? என்று நான் கொஞ்சம் குழம்பியபோது எனக்கு எடுத்து சொல்வதற்காகவே இந்த வாரம் தினமலர் - பக்தி மலர் புத்தகத்தில் வாழ்க்கையின் பொருள் என்ன? நாம் வந்த கதை என்ன? என்ற கட்டுரை வந்துள்ளது. எதிர்க்காலத்தில் எனக்கு மீண்டும் இந்த குழப்பம் வரும் பொது இந்த கட்டுரை உதவும் என்பதற்க்காக அந்த கட்டுரையை என் பதிவில் அப்படியே போட்டு விட்டேன்.

செவ்வாய், 14 ஜூலை, 2009

சந்தோஷ்

என் அண்ணனின் உயிர் தோழன்.
ஒரு சாதரண நவரச குணங்கள் குடிகொண்ட வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒருவரை பிடித்தல் அதுவும் எந்த குறையும் இல்லாமல் அவர் மீது அன்பு செலுத்துதல் என்பது எளிதாக பார்க்க கூடிய விஷயம் இல்லை.

சந்தோஷ் அண்ணா எங்கள் வீட்டில் அப்படி பட்ட ஒரு சிறந்த இடத்தில் இருந்தார். எங்கள் வீட்டில் நடந்த சுக துக்கங்களில் குடும்பத்தில் ஒருவராய் இருந்தார். அவர் பார்ப்பதற்கு பணக்கார பையன் தோரணையில் இருப்பார். ஆனால் பழக எளிதானவர். என் அண்ணனுக்கு பல ஆன்மிக சிந்தனைய தூண்டியவர் அவர் தான்.

அம்மா, அப்பா, ஒரு அக்கா என ஒரு சாதரண ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களை பார்த்தவர். கடந்த 4 வருடங்களாக தான் சென்னையில் ஒரு நல்ல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை கிடைத்து தன் குடும்பத்தின் ஏழை பேயை விரட்டினார்.
கடந்த வெள்ளி கிழமை (10.07.09) தனது பெற்றோருக்கு 60 ம் கல்யாணத்தை நடத்தி சந்தோச பட்டார். அவர் பெற்றோரும் அவருக்கு பெண் பார்த்து நாள் குறித்து கொண்டு இருந்தனர்.

13.07.09 திங்கள் கிழமை சந்தோசத்துடன் அவர் சென்னை செல்ல தயாரானார். எங்கள் 'சந்தோஷ்' த்தை எமன் எடுத்து செல்ல தயாராக இருக்கிறான் என்பதை அறியாமல் நாங்களும் சந்தோசமாக இருந்தோம். அன்று காலை சந்தோஷ் அண்ணா அனைவரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் அவர் பைக்கில் திருச்சியிலிருந்து சென்னைக்கு சென்றார். விருத்தாச்சலத்தில் ஒரு லாரி அவர் மீது மோதியதில் அந்த இடத்திலே அவர் உயிர் பலி ஆனது. தங்களது ஒரே உத்தம புத்திரனை இழந்த அவரது பெற்றோரின் நிலையை சொல்லி மாறாது.

கடவுள் பசி என்ற ஒற்றை கொடுத்து விட்டதால் இதோ எங்கள் கண்ணீர் 2 நாட்கள், என் அண்ணனின் கண்ணீர் 2 வாரங்கள், அவர் குடும்பத்தாரின் கண்ணீர் 2 மாதங்கள், அவர் பெற்றோரின் கண்ணீர்..... ....... .... .... ..... ஒரு குறிப்பிட்ட காலம் வரை விடாமலும் பிறகு விட்டு விட்டும் தொடரும்.

இவ்வளவு நல்லவருக்கே இது தான் நிலைமை. (என் நிலைமை????)

வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்

புது கூடு போகும் எங்கள் சந்தோஷ் அண்ணாவின் ஆன்மா பல சந்தோசங்கள் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்.

வெள்ளி, 3 ஜூலை, 2009

தாயுமானவர்


ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு பல அற்புத அனுபவங்கள் கிடைக்கும். இங்கு நான் நேசித்த அனுபவத்தை வாசிக்கிறேன்.
எனக்கு மலைக்கோட்டை தாயுமானவர் தான் உறவு, பகை எல்லாம். அவரோடு எனக்கு இருக்கும் உறவு....... முழுவதையும் வாசிக்க முடியதால் சிலவற்றை மட்டும் எழுதுகிறேன்
தாயாக

தாய்மை மிக உன்னதமானது. தன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்த பிள்ளைகளின் ஆசைகள் கூட நிறைவேற மனதார உருகுபவள் தாய்.
தாயுமானவரும் என்னை அப்படி தான் பார்த்து கொள்கிறார்.
நான் 12 படிக்கும் போது இரயிலில் வட இந்தியா போகணும் friends உடன் ஹாஸ்டலில் தங்கணும் என்று எல்லாம் ஆசை பட்டேன். இது எல்லாம் நான் கல்லூரியில் சேர்ந்ததும் எனக்கு கிடைத்தது. N.C.C. சேர்ந்தேன் பூரி (orissa), Gwalior (மத்தியப்ரதேசம்) எல்லாம் சுத்தினேன். போரில் சண்டை போடும் வாய்ப்பும் கிடைத்தது. Camp- ல் War demonstration- ல் நானும் பங்கேற்று அந்த ஆசையும் நிறைவேறியது

தந்தையாக
பிள்ளைகளுக்கு அறிவும் மட்டும் இல்லாது பல விசயங்களையும் கற்று தருபவர் தந்தை. எனக்கு அறிவு, தைரியம், பக்குவம் எல்லாம் வேண்டும் போது சரியாக கொடுப்பவர் என் தாயுமானவர்
சில நேரம் அசாத்திய மன தைரியம் வரும். அந்த தைரியத்தில் பல பிரச்சனைகள் ஓடி இருக்கிறது. என் அக்கா கல்யாணத்தின் போது எங்களிடம் ஒரு ரூபா கூட சேமிப்பு இல்லை. ஆனால் எனக்கும், அம்மாவுக்கும் இருந்த தைரியத்தில் யாரிடமும் அதிகமாக கடன் வாங்காமல் நல்ல முறையில் என் அக்காவின் திருமணமும் அதன் பின் தொடர்ந்து 1.5 வருடம் ஆடி, தீபாவளி, பொங்கல், வளைகாப்பு, என்று எல்லாம் நல்ல படியாக நடந்தது.

என் குருவாக
நான் யாருக்காது உதவி / உபத்திரம் செய்தால் அன்றோ அல்லது மறுநாளோ நா செய்தது வேறு ஒருவர் மூலமாக எனக்கு திரும்ப வருகிறது. இதனால் என்னிடம் யாரவது உதவி கேட்டல் முடிந்தவை செய்து விடுவேன் ஏனெனில் அது திரும்ப எனக்கு தானே வரும். அதே போல தான் கஷ்டங்களும்.......
அன்று பஸ்சில் ஒருவர் ரூ.5 கொடுத்து ரூ.3.50 ticket வாங்கினார். நடத்துனர் அவரிடம் '50 பைசா கொடுத்துவிட்டு ரூ.2 வங்கிக்கோ என்னிடம் சில்லறை இல்லை' என்றார். அவரிடம் சிலரை இல்லதல் நா 50 பைசா கொடுத்து பணம் வங்கிக்க சொல்லி நடத்துனரின் முறைப்பை பெற்றேன். 'உனக்கு நா எப்படி தருவேன்' என்றவரிடம் பெரிய மனதுடன்(!) 'பரவால்லை' என்றால்லும் உள்ளுக்குள் 'இந்த பைசா நாளைக்குள் எனக்கு வந்துவிடும்' என்று நினைத்தே கொடுத்தேன். ஆச்சரியம் மறுநாள் நான் டிக்கெட் எடுக்கும் போது நடத்துனர் எனக்கு ரூ.3 க்கு பதிலாக ரூ.2 டிக்கெட் கொடுக்க அதை மாற்றி கேட்க கூட அவகாசம் தராமல் அவர் நகர நா இறங்க வேண்டிய நிறுத்தமும் வர..........
இவரை போல நல்லது கேட்டதை சொல்லி தரும் குரு உலகில் வேறு எங்கு இருக்கிறார்.

அண்ணன்னாக
அண்ணன் என்பவன் தனது தம்பி தங்கைகளுக்கு இன்னொரு அப்பா. தங்கைளை பொறுப்புடன் பாதுகாக்கும் பாதுகாவலன்.
ஒரு நாள் நான் அலுவலகத்திற்கு போகும் போது இரவில் பெய்த மழையால் 20,30 அடி தூரம் ரோட்டில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றது. எதை எப்படி கடந்து போவது என்று யோசிக்கும் போது அங்கு ஒரு tractor வந்தது. அந்த tractor ஓட்டுனர் உதவிக்கு வந்தார் நானும் சரி என்று ஏறிக்கொண்டேன். 60 அடி தூரத்தில் தான் எங்கள் அலுவலகம் இருந்தது. அவர் என்னை அலுவலகத்துக்கு அருகில் இறக்கி விடுகிறேன் என்றார் நானும் சரி என்றேன் ஆனால் எங்கள் அலுவலகம் அருகில் வந்ததும் நான் வண்டியை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் போனார்.அப்போது அவர் முகமும் கொஞ்சம் மாறியது. எனக்கு ஒரு நிமிடம் பயம் வந்துவிட்டது. அப்போது என்றும் இல்லாத ஆச்சிரியமாக எங்க அலுவலகத்திற்கு அருகில் ஒரு police inspector நின்று கொண்டு இருந்தார். அந்த tractor காரர் திடீரென்று அங்கு வந்த police inspector பார்த்ததும் உடனே என்னை இறக்கி விட்டுட்டு (அந்த police inspector அருகில்!!!!!) இறக்கிவிட்டுட்டு திரும்பி பார்க்காமல் போனார்.

என் அக்காவாக
அண்ணன் பாதுகாவலன் என்றல் அக்கா உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் நல்ல தோழி.
என் friends, சொந்தகார்கள், தெரிந்தவர்கள் என்று யார் நினைவாது திடீரென்று வரும். அவர்களை நினைத்து கொண்டு இருக்கும் போதே அன்றோ அல்லது மறுநாளோ அவர்கள் என் கண் முன் வந்து நிற்பார்கள். என் friend உஷா ஈரோட்டில் இருகிறாள். 2 நாட்களாக அவளது ஞாபகம் வந்து வந்து போனது. அன்று மாலை போன் பேச நினைத்தேன். ஆச்சரியம் அன்று மாலை அவளே எங்கள் வீட்டுக்கு வந்து எப்படி டி இருக்கே என்று கேட்கிறாள்?

தெய்வமாக
எனக்கு கஷ்டங்கள் வரும் பொது மலைக்கோட்டைக்கு போயீ தாயுமானவர் முன் நின்று அழுவேன். அப்போது அவரே வந்து எனக்கு ஆறுதல் சொல்லுவது போல என் மனம் உணரும். கொஞ்ச நேரம் / நாட்களில் அந்த கஷ்டமும் மறையும். பட்ட கஷ்டதுககு ஏற்ப மகிழ்ச்சியும் கிடைக்கும்.

தாயுமானவர் பற்றியும், அவர் பெருமக்களை பற்றியும் சொன்னால் அது ஒரு முடிவு இல்லாத அதிசயமாக தான் இருக்கும். என் இன்பமும் அவராலே, துன்பமும் அவராலே. அவர் இன்றி நான் இல்லை என்பதே உண்மை. ஓம் நாம சிவாய

புதன், 1 ஜூலை, 2009

வாழ்க வளமுடன்


நேற்று (28.06.09) திருச்சி சிதம்பரம் மஹாலில் நடந்த வேதாத்ரி மகரிஷி மனவளக்கலை-ன் பொன் விழாவிற்கு போயிருந்தேன். விழா-வை சிறப்பாக நடத்தினர். விழாவிற்கு தலைவர் SKM மயிலானந்தம் (Mayilanandam) தலைமை வகித்தார். எனக்கு பொதுவாகவே யோகா கலை பயிற்சிக்கு வரும் பலரது பேச்சுக்கள் பிடிக்காது. அவர்கள் தப்பாக எதுவும் பேச மாட்டார்கள் ஆனால் சுவாரசியம் என்று அவர்கள் பேசுவது தத்து பித்து என்று தான் இருக்கும்.

நேற்று நடந்த விழாவில் பேசியவர்கள் 'தலைவர்' 'தலைவர்' என்று தாங்கினாலும் அவரை பற்றி பெருமையாக எதுவும் பேசவில்லை. கடைசியில் தலைவர் பேசினார். அவர் 50 ஆண்டுகளில் மகரிஷியோடு நன்கு பழகியதை முதலில் சொல்லும் பொது மகரிஷி பற்றி பல தகவல்களை தருவார் என்று ஆவலோடு எதிர் பார்த்தேன். ஆனால் அவர் மகரிஷி பற்றி ஒரு 10% தான் பேசி இருப்பார். மீதம் 90% அவர் மகரிஷிக்கு எப்படி உதவி செய்தார் என்பதையும் தன்னால் நமது மனவளக் கலை மன்றம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பது பற்றயுமே இருந்தது.

அவரது பேச்சிலிருந்து சில
1. உடல் நலம்: உடல் என்பது அஸ்திவாரம். உடல் நல கோளாறு நம்மையும், நம்மை சுத்தி இருபவர்கயும் கஷ்ட படுத்துகிறது. நமது மகரிஷி எளிமையான பயிற்ச்சிகள் மூலம் அனைவரும் கற்கும் படி செய்துள்ளார். பிறருக்கு சேவை செய்வதற்கு முன் நமக்கு நாமே உடல் பயிற்சி செய்வது மூலம் சேவை செய்து கொள்ள வேண்டும் .

2. மனம்: மனம் என்பது எண்ணங்களின் குவியல். மன நலகுறைவு ஒருவரையும் அவரை சார்ந்தோரையும் அழித்து விடுகிறது.கோபத்தால், மன அழுத்தத்தால் இதயம், நரம்பு, இரத்தம், சுரப்பிகள், ஜீரண உறுப்புக்கள், திசுக்கள் ஆகிய அணைத்து உறுப்புகளுமே சீர்குலைந்து விடும் .

a. மனதின் தரம் = மனிதனின் தரம்
நாம் விடைத்த விதைகளே இன்பமும், துன்பமும், இதன் பலன்கள் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மை வந்தே சாரும் .
b. சாதாரண அறிவு - எப்படி வாழ்வது, எப்படி வாழ்க்கை நடத்துவது.
பேரறிவு - நான் யார், இறை நிலை என்றால் என்ன, அதனோடு எப்படி சேர்வது
b. அறியாமை - தீய எண்ணங்கள், தீய சொற்கள், கோபம், பொறாமை வர
காரணம் அறியாமையே
c. விருப்பு , வெறுப்புக்கு காரணம் நமது மனமே .
d. இதயம் அன்பால் நிறைய வேண்டும்
e. அமைதியான மனம் ஆராய்ந்து முடிவு எடுக்கும், விவேக சக்தி பெரும், கரும நெறிப்படி வாழ வழி செய்யும்
f. குணங்கள்
மிருக குணம் - சோம்பேறித்தனம், பிறரை கஷ்ட படுத்தி வாழ்வது,
மனித குணம் - சுறுசுறுப்பு, ஆசை, பேராசை,
தெய்வீக குணம் - அன்பு, கருணை, சேவை, இன்சொல், பணிவு
g. சிறந்தது அறவறமா? துறவறம்?
அவர் அவர் நிலைகளின் ஒழுக்க நெறி படி வாழ்வதே சிறந்த அறம் ஆகும் .
i. Insurance - ஆன்மீக இன்சூரன்ஸ் மட்டுமே பலனை உங்களுக்கே கொடுக்கும்.
இவை எல்லாம் மகரிஷி சொன்னவை தான்.

தலைவரின் டாப் 5 (+)
1. ஆசிரியர், பேராசியர்களை கௌரவித்தல் - (தனது சொந்த செலவில் )
2. நவீன நடைமுறைக்கு ஏற்ப C.D போட்டது
3. மனவள கலையை ஆன்மீக கல்வியாக மாற்ற பல்கலைகலகங்களுடன் சேர்ந்தது (Dimploma, B.A., M.A., M.Phil)
4. நிர்வாக பொறுப்பை பிரித்து பிரித்து கொடுப்பது
5. 2 வருடங்களில் இதை எல்லாம் செய்தது

தலைவரின் top 5 (-)
1. பணம், பொருள் இருக்கும் நபர்களிடம் நிர்வாக பொறுப்பு போகிறது(management trusteee - நிர்வகிப்பவர், permenant trustee - மன்றங்களுக்கு இடத்தை தருபவர், donor trustee - குறிப்பிட்ட அளவு நன்கொடை தருபவர் - இவர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற படுவார், etc).
2. தலைவரே தன புகழை அதிகமா பாடுகிறார். மேலும் பணம் கொடுத்து பொறுப்பு பெறுபவர்களுக்கு சில உரிமைகளும் கொடுக்க பட வேண்டும். ஆதலால் இனி வரும் நிர்வாகிகளிடம் பழைய சேவை மனப்பான்மை இனி அரிதாக இருக்கலாம்
3. சேவை செய்பவர்களின் பொறுப்பை அதிக படுத்துவதால் அவர்களால் மன்றங்களுக்கு வரும் நோக்கம் மாறுகிறது.
4. ஆசான் விரும்பிய தனி மனித அமைதி இப்ப அவரிடம் (தலைவரிடம்)இருகிறதா என்று தெரியலை. மற்ற நிர்வாகிகளுக்கு எப்படி வரும்?
5. Matric School, College-கு ஆட்களை பிடிப்பதை போல Diplamo, Degree course க்கு ஆட்களை பிடிக்க ஆசிரியர்களை நிர்பந்தித்தல்.

மகரிஷி - தலைவர் ஒற்றுமை
எனக்கு தெரிந்து ஒன்னும் இல்லை.

மகரிஷி - தலைவர் வேற்றுமை.
மகரிஷி -தனது இந்த யோகா கலை மூலமாக மனிதன் உயர்ந்த நிலைய அடைய பெரிதும் சிரம பட்டார் .
தலைவர் - இந்த யோகா கலை உலகத்துக்கு பிரபல படுத்தவே பெரிதும் சிரம படுகிறார். (இப்ப இருக்கும் கல்விகள் ஒரு வியாபாரமகவே இருக்கிறது. இவரும் இந்த யோக கலையை அந்த வியாபார கூட்டத்தில் சேர்க்க பெரிதும் ஆசை படுகிறார் )

ஒரு மனவளக் கலை மன்றத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் ஆசான் என்றோ, குரு என்றோ அழைப்பது பொருத்தமாக இருக்கும். அவர் தன்னை தலைவர் தலைவர் என்று அழைப்பதின் மூலம் அவரின் தலை கணமே அதிகம் ஆகுவது போல இருக்கு.


இது எல்லாம் உயர்வான புனித யோக கலையின் மகத்துவத்தையும் மகரிஷியின் நோக்கங்களையும் தாழ்த்தாமல் இருக்க வேண்டும்

வாழ்க வளமுடன்

வியாழன், 25 ஜூன், 2009

உயிர் போனால்.................

ஒரு விபத்து நடந்தால் அதில் இறந்தவர்களின் உறவினர்கள் instalment-ல் ஓட்டுனரை திடுவர். நானும் இப்ப அந்த ஓட்டுனர் நிலையில் தான் இருக்கிறேன். ஒரு தப்புக்கு இரண்டு அல்லது மூன்று முறை திட்டு வாங்கலாம். எட்டு, பத்து முறை திட்டு வாங்கினால் ...................
ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினம். அன்று என் கம்ப்யூட்டர்களுக்கு - க்கு வந்தது வைரஸ் . எனக்கு வந்தது சனியன் .... கிட்ட தட்ட ஒரு மாதம் வைரஸ் கம்ப்யூட்டர்களை -யை ஆட்டி படைக்க அதில் நானும் மாட்டிக்கொண்டு சின்னப் படுகிறேன் . ஒன்னும் இல்லை . சில (10 to 12 files) மிக முக்கியமான files பென் ட்ரிவ் -ல வைத்திருந்தேன். கம்ப்யூட்டர் சர்வீஸ் -க்கு வந்தவருக்கு அது தெரியது அல்லவா? அவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் முடித்து விட்டு என்னிடம் பென் ட்ரிவ்-ல் virus இருக்கு. format பண்ணினா தான் அதில் இருக்கும் வைரஸ் போகும் என்று சொல்ல அப்ப இருந்த மனநிலையில் கொஞ்சம் யோசிக்காம நானும் அவரிடமே எப்படி format பண்ணுவது என்று கேட்டு பண்ணிட்டேன். பிறகு தான் தெரிஞ்சது format பண்ணின்னா files காலி ஆகும் என்று .ஒரு வாரமா நெட் -ல பென் ட்ரிவ் files recovery software தேடி தேடி அலுத்து போனேன். ரிசல்ட் 0 தான். இதுவும் ஒரு விபத்து தானே?

எங்க M.D. கிட்டே அப்பவே files delete ஆனதும் மீண்டும் recovery பண்ண முடியாதையும் கொஞ்ச கொஞ்சமா திக்கு தெணறி சொல்லிட்டேன். ஆனால் இப்பவும் அதுக்கு திட்டு வாங்கிக்கிட்டு இருக்கேன் . அடிக்கடி pen drive-ல இருந்த files எடு என்பார் . நா delete ஆனதை சொன்னால் அப்ப ஒரு திட்டு வாங்கிட்டு நெட்-ல 2 நாள் fulla recovery software இருக்கா ன்னு தேடுவேன். மீண்டும் 15 நாள் அல்லது ஒரு மாதம் கழித்து வேற ஒரு files கேட்பார். அதும் delete list-ல இருப்பதை சொல்லிட்டு திட்டு வாங்கிட்டு மீண்டும் நெட்-ல 2 நாள் fulla recovery software இருக்கா ன்னு தேடுவேன். இப்பெல்லாம் பொறுப்பு இல்லை, அது இல்லை, இது இல்லை ன்னு திட்டும் வார்த்தைளின் வேகம் அதிகமா இருக்கு .
என்ன தான் ஓட்டுனரை திட்டினாலும் அவர்களால் போன உயிரை தரவா முடியும்?

செவ்வாய், 23 ஜூன், 2009

இரண்டாவது பதிவு

இது என் இரண்டாவது பதிவு. என் பிளாக் ஆரம்பித்து மூன்று மாதம் வரை என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல் இருந்த எனக்கு இட்லி வடை ஆரம்பித்து பல வலைப் பதிவு சீனியர்கள் மூலம் கொஞ்சம் எழுத கத்துக்கிட்டு என் முதல் பதிவை எழுதினேன். எனக்கு எழுத கற்று தந்த வலைப் பதிவு சீனியர்கள் அனைவர்க்கும் என் நன்றிகள்.என் எழுத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

வியாழன், 18 ஜூன், 2009

A MEETING WITH AN ARTIST

சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் சுவரொட்டி விளம்பரத்திற்காக ஒருவர் வந்தார். எங்கள் கம்பனிக்காக பல இடங்களில் அவர் சுவர் விளம்பரம் எழுதி உள்ளார். எங்கள் அலவலக சுவருக்கும் விளம்பரம் எழுதுவதற்காக அவர் வந்த போது அவரோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் தனது தொழில் திறமைகளை பற்றி பெருமையாக பேசும் பொது, 'காவிரி ஆத்துக்கு பக்கத்தில ஒரு சுவர் மேல இருக்கும் பாருங்க விளம்பரம் அது நா தான் எழுதினேன். அதை ரொம்ப ரிஸ்க் எடுத்து எழுதினேன்' ன்னு சொன்னார். நான் பதிலுக்கு 'அந்த பெரிய சாக்கடை சுவத்துலயும் எழுதியது நீங்க தானா?' என்று கேட்டேன். ஏனெனில் எனக்கு அந்த சாக்கடை சுவர்மேல் எழுதுவது தான் பெரிய விஷயமா இருந்தது. அந்த சாக்கடை பார்க்கும் போதே எனக்குள் ஒரு பயமும், அருவருப்பும் வரும். அதில் கஷ்டபட்டு நாத்தத்தை பொறுத்துக்கிட்டு, கயிறு கட்டி எழுதுவது என்னை பொறுத்தவரை காவேரி ஆற்று சுவற்றில் எழுதுவதை விட ரொம்ப ரிஸ்க் .

ஆனால் நா கேட்ட விதம் அவருக்கு சங்கடத்தை கொடுத்தது. பிறகு அதை சமாளிக்க 'நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?'ன்னு கேட்டேன். அவர் சொன்ன பதில் எனக்கு வியப்பை கொடுத்தது. அவர் பள்ளிக்கே போகலையாம். 'சின்ன வயசிலே இதுபோல ஒருத்தர்கிட்டே வேலைக்கு போனேன். அப்படியே இந்த தொழில் கத்துகிட்டேன்' ன்னு சொன்னார்.

கடைசியாக அவர் சுவர் எழுதியதியதற்கான கணக்கை பார்த்து ரொம்ப ஆச்சர்யபட்டு போனேன். ஏனெனில் சுவர்களில் அச்சு வார்த்தால் போல் அழகாக எழுதும் அவர் கையெழுத்து அந்த பில்லில் தப்பு தப்பான ஸ்பெல்லிங்குடன் என் கையெழுத்து போலவே படு மோசமாக இருந்தது.