வியாழன், 25 ஜூன், 2009

உயிர் போனால்.................

ஒரு விபத்து நடந்தால் அதில் இறந்தவர்களின் உறவினர்கள் instalment-ல் ஓட்டுனரை திடுவர். நானும் இப்ப அந்த ஓட்டுனர் நிலையில் தான் இருக்கிறேன். ஒரு தப்புக்கு இரண்டு அல்லது மூன்று முறை திட்டு வாங்கலாம். எட்டு, பத்து முறை திட்டு வாங்கினால் ...................
ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினம். அன்று என் கம்ப்யூட்டர்களுக்கு - க்கு வந்தது வைரஸ் . எனக்கு வந்தது சனியன் .... கிட்ட தட்ட ஒரு மாதம் வைரஸ் கம்ப்யூட்டர்களை -யை ஆட்டி படைக்க அதில் நானும் மாட்டிக்கொண்டு சின்னப் படுகிறேன் . ஒன்னும் இல்லை . சில (10 to 12 files) மிக முக்கியமான files பென் ட்ரிவ் -ல வைத்திருந்தேன். கம்ப்யூட்டர் சர்வீஸ் -க்கு வந்தவருக்கு அது தெரியது அல்லவா? அவர் கம்ப்யூட்டர் சர்வீஸ் முடித்து விட்டு என்னிடம் பென் ட்ரிவ்-ல் virus இருக்கு. format பண்ணினா தான் அதில் இருக்கும் வைரஸ் போகும் என்று சொல்ல அப்ப இருந்த மனநிலையில் கொஞ்சம் யோசிக்காம நானும் அவரிடமே எப்படி format பண்ணுவது என்று கேட்டு பண்ணிட்டேன். பிறகு தான் தெரிஞ்சது format பண்ணின்னா files காலி ஆகும் என்று .ஒரு வாரமா நெட் -ல பென் ட்ரிவ் files recovery software தேடி தேடி அலுத்து போனேன். ரிசல்ட் 0 தான். இதுவும் ஒரு விபத்து தானே?

எங்க M.D. கிட்டே அப்பவே files delete ஆனதும் மீண்டும் recovery பண்ண முடியாதையும் கொஞ்ச கொஞ்சமா திக்கு தெணறி சொல்லிட்டேன். ஆனால் இப்பவும் அதுக்கு திட்டு வாங்கிக்கிட்டு இருக்கேன் . அடிக்கடி pen drive-ல இருந்த files எடு என்பார் . நா delete ஆனதை சொன்னால் அப்ப ஒரு திட்டு வாங்கிட்டு நெட்-ல 2 நாள் fulla recovery software இருக்கா ன்னு தேடுவேன். மீண்டும் 15 நாள் அல்லது ஒரு மாதம் கழித்து வேற ஒரு files கேட்பார். அதும் delete list-ல இருப்பதை சொல்லிட்டு திட்டு வாங்கிட்டு மீண்டும் நெட்-ல 2 நாள் fulla recovery software இருக்கா ன்னு தேடுவேன். இப்பெல்லாம் பொறுப்பு இல்லை, அது இல்லை, இது இல்லை ன்னு திட்டும் வார்த்தைளின் வேகம் அதிகமா இருக்கு .
என்ன தான் ஓட்டுனரை திட்டினாலும் அவர்களால் போன உயிரை தரவா முடியும்?

செவ்வாய், 23 ஜூன், 2009

இரண்டாவது பதிவு

இது என் இரண்டாவது பதிவு. என் பிளாக் ஆரம்பித்து மூன்று மாதம் வரை என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல் இருந்த எனக்கு இட்லி வடை ஆரம்பித்து பல வலைப் பதிவு சீனியர்கள் மூலம் கொஞ்சம் எழுத கத்துக்கிட்டு என் முதல் பதிவை எழுதினேன். எனக்கு எழுத கற்று தந்த வலைப் பதிவு சீனியர்கள் அனைவர்க்கும் என் நன்றிகள்.என் எழுத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.

வியாழன், 18 ஜூன், 2009

A MEETING WITH AN ARTIST

சமீபத்தில் எங்கள் அலுவலகத்தில் சுவரொட்டி விளம்பரத்திற்காக ஒருவர் வந்தார். எங்கள் கம்பனிக்காக பல இடங்களில் அவர் சுவர் விளம்பரம் எழுதி உள்ளார். எங்கள் அலவலக சுவருக்கும் விளம்பரம் எழுதுவதற்காக அவர் வந்த போது அவரோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் தனது தொழில் திறமைகளை பற்றி பெருமையாக பேசும் பொது, 'காவிரி ஆத்துக்கு பக்கத்தில ஒரு சுவர் மேல இருக்கும் பாருங்க விளம்பரம் அது நா தான் எழுதினேன். அதை ரொம்ப ரிஸ்க் எடுத்து எழுதினேன்' ன்னு சொன்னார். நான் பதிலுக்கு 'அந்த பெரிய சாக்கடை சுவத்துலயும் எழுதியது நீங்க தானா?' என்று கேட்டேன். ஏனெனில் எனக்கு அந்த சாக்கடை சுவர்மேல் எழுதுவது தான் பெரிய விஷயமா இருந்தது. அந்த சாக்கடை பார்க்கும் போதே எனக்குள் ஒரு பயமும், அருவருப்பும் வரும். அதில் கஷ்டபட்டு நாத்தத்தை பொறுத்துக்கிட்டு, கயிறு கட்டி எழுதுவது என்னை பொறுத்தவரை காவேரி ஆற்று சுவற்றில் எழுதுவதை விட ரொம்ப ரிஸ்க் .

ஆனால் நா கேட்ட விதம் அவருக்கு சங்கடத்தை கொடுத்தது. பிறகு அதை சமாளிக்க 'நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?'ன்னு கேட்டேன். அவர் சொன்ன பதில் எனக்கு வியப்பை கொடுத்தது. அவர் பள்ளிக்கே போகலையாம். 'சின்ன வயசிலே இதுபோல ஒருத்தர்கிட்டே வேலைக்கு போனேன். அப்படியே இந்த தொழில் கத்துகிட்டேன்' ன்னு சொன்னார்.

கடைசியாக அவர் சுவர் எழுதியதியதற்கான கணக்கை பார்த்து ரொம்ப ஆச்சர்யபட்டு போனேன். ஏனெனில் சுவர்களில் அச்சு வார்த்தால் போல் அழகாக எழுதும் அவர் கையெழுத்து அந்த பில்லில் தப்பு தப்பான ஸ்பெல்லிங்குடன் என் கையெழுத்து போலவே படு மோசமாக இருந்தது.