வியாழன், 16 ஜூலை, 2009

வாழ்க்கையின் பொருள் என்ன? நாம் வந்த கதை என்ன?



சந்தோஷ் அண்ணா இறப்பிற்கு பிறகு வாழ்க்கையின் அர்த்தம் என்ன? நாம் வாழ்வதின் நோக்கம் என்ன? என்று நான் கொஞ்சம் குழம்பியபோது எனக்கு எடுத்து சொல்வதற்காகவே இந்த வாரம் தினமலர் - பக்தி மலர் புத்தகத்தில் வாழ்க்கையின் பொருள் என்ன? நாம் வந்த கதை என்ன? என்ற கட்டுரை வந்துள்ளது. எதிர்க்காலத்தில் எனக்கு மீண்டும் இந்த குழப்பம் வரும் பொது இந்த கட்டுரை உதவும் என்பதற்க்காக அந்த கட்டுரையை என் பதிவில் அப்படியே போட்டு விட்டேன்.

செவ்வாய், 14 ஜூலை, 2009

சந்தோஷ்

என் அண்ணனின் உயிர் தோழன்.
ஒரு சாதரண நவரச குணங்கள் குடிகொண்ட வீட்டில் உள்ள அனைவருக்கும் ஒருவரை பிடித்தல் அதுவும் எந்த குறையும் இல்லாமல் அவர் மீது அன்பு செலுத்துதல் என்பது எளிதாக பார்க்க கூடிய விஷயம் இல்லை.

சந்தோஷ் அண்ணா எங்கள் வீட்டில் அப்படி பட்ட ஒரு சிறந்த இடத்தில் இருந்தார். எங்கள் வீட்டில் நடந்த சுக துக்கங்களில் குடும்பத்தில் ஒருவராய் இருந்தார். அவர் பார்ப்பதற்கு பணக்கார பையன் தோரணையில் இருப்பார். ஆனால் பழக எளிதானவர். என் அண்ணனுக்கு பல ஆன்மிக சிந்தனைய தூண்டியவர் அவர் தான்.

அம்மா, அப்பா, ஒரு அக்கா என ஒரு சாதரண ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களை பார்த்தவர். கடந்த 4 வருடங்களாக தான் சென்னையில் ஒரு நல்ல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை கிடைத்து தன் குடும்பத்தின் ஏழை பேயை விரட்டினார்.
கடந்த வெள்ளி கிழமை (10.07.09) தனது பெற்றோருக்கு 60 ம் கல்யாணத்தை நடத்தி சந்தோச பட்டார். அவர் பெற்றோரும் அவருக்கு பெண் பார்த்து நாள் குறித்து கொண்டு இருந்தனர்.

13.07.09 திங்கள் கிழமை சந்தோசத்துடன் அவர் சென்னை செல்ல தயாரானார். எங்கள் 'சந்தோஷ்' த்தை எமன் எடுத்து செல்ல தயாராக இருக்கிறான் என்பதை அறியாமல் நாங்களும் சந்தோசமாக இருந்தோம். அன்று காலை சந்தோஷ் அண்ணா அனைவரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் அவர் பைக்கில் திருச்சியிலிருந்து சென்னைக்கு சென்றார். விருத்தாச்சலத்தில் ஒரு லாரி அவர் மீது மோதியதில் அந்த இடத்திலே அவர் உயிர் பலி ஆனது. தங்களது ஒரே உத்தம புத்திரனை இழந்த அவரது பெற்றோரின் நிலையை சொல்லி மாறாது.

கடவுள் பசி என்ற ஒற்றை கொடுத்து விட்டதால் இதோ எங்கள் கண்ணீர் 2 நாட்கள், என் அண்ணனின் கண்ணீர் 2 வாரங்கள், அவர் குடும்பத்தாரின் கண்ணீர் 2 மாதங்கள், அவர் பெற்றோரின் கண்ணீர்..... ....... .... .... ..... ஒரு குறிப்பிட்ட காலம் வரை விடாமலும் பிறகு விட்டு விட்டும் தொடரும்.

இவ்வளவு நல்லவருக்கே இது தான் நிலைமை. (என் நிலைமை????)

வாழ்க்கையின் அர்த்தம் என்ன?

அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்

புது கூடு போகும் எங்கள் சந்தோஷ் அண்ணாவின் ஆன்மா பல சந்தோசங்கள் பெற்று மகிழ்ச்சியுடன் இருக்கட்டும்.

வெள்ளி, 3 ஜூலை, 2009

தாயுமானவர்


ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு பல அற்புத அனுபவங்கள் கிடைக்கும். இங்கு நான் நேசித்த அனுபவத்தை வாசிக்கிறேன்.
எனக்கு மலைக்கோட்டை தாயுமானவர் தான் உறவு, பகை எல்லாம். அவரோடு எனக்கு இருக்கும் உறவு....... முழுவதையும் வாசிக்க முடியதால் சிலவற்றை மட்டும் எழுதுகிறேன்
தாயாக

தாய்மை மிக உன்னதமானது. தன்னை முதியோர் இல்லத்தில் சேர்த்த பிள்ளைகளின் ஆசைகள் கூட நிறைவேற மனதார உருகுபவள் தாய்.
தாயுமானவரும் என்னை அப்படி தான் பார்த்து கொள்கிறார்.
நான் 12 படிக்கும் போது இரயிலில் வட இந்தியா போகணும் friends உடன் ஹாஸ்டலில் தங்கணும் என்று எல்லாம் ஆசை பட்டேன். இது எல்லாம் நான் கல்லூரியில் சேர்ந்ததும் எனக்கு கிடைத்தது. N.C.C. சேர்ந்தேன் பூரி (orissa), Gwalior (மத்தியப்ரதேசம்) எல்லாம் சுத்தினேன். போரில் சண்டை போடும் வாய்ப்பும் கிடைத்தது. Camp- ல் War demonstration- ல் நானும் பங்கேற்று அந்த ஆசையும் நிறைவேறியது

தந்தையாக
பிள்ளைகளுக்கு அறிவும் மட்டும் இல்லாது பல விசயங்களையும் கற்று தருபவர் தந்தை. எனக்கு அறிவு, தைரியம், பக்குவம் எல்லாம் வேண்டும் போது சரியாக கொடுப்பவர் என் தாயுமானவர்
சில நேரம் அசாத்திய மன தைரியம் வரும். அந்த தைரியத்தில் பல பிரச்சனைகள் ஓடி இருக்கிறது. என் அக்கா கல்யாணத்தின் போது எங்களிடம் ஒரு ரூபா கூட சேமிப்பு இல்லை. ஆனால் எனக்கும், அம்மாவுக்கும் இருந்த தைரியத்தில் யாரிடமும் அதிகமாக கடன் வாங்காமல் நல்ல முறையில் என் அக்காவின் திருமணமும் அதன் பின் தொடர்ந்து 1.5 வருடம் ஆடி, தீபாவளி, பொங்கல், வளைகாப்பு, என்று எல்லாம் நல்ல படியாக நடந்தது.

என் குருவாக
நான் யாருக்காது உதவி / உபத்திரம் செய்தால் அன்றோ அல்லது மறுநாளோ நா செய்தது வேறு ஒருவர் மூலமாக எனக்கு திரும்ப வருகிறது. இதனால் என்னிடம் யாரவது உதவி கேட்டல் முடிந்தவை செய்து விடுவேன் ஏனெனில் அது திரும்ப எனக்கு தானே வரும். அதே போல தான் கஷ்டங்களும்.......
அன்று பஸ்சில் ஒருவர் ரூ.5 கொடுத்து ரூ.3.50 ticket வாங்கினார். நடத்துனர் அவரிடம் '50 பைசா கொடுத்துவிட்டு ரூ.2 வங்கிக்கோ என்னிடம் சில்லறை இல்லை' என்றார். அவரிடம் சிலரை இல்லதல் நா 50 பைசா கொடுத்து பணம் வங்கிக்க சொல்லி நடத்துனரின் முறைப்பை பெற்றேன். 'உனக்கு நா எப்படி தருவேன்' என்றவரிடம் பெரிய மனதுடன்(!) 'பரவால்லை' என்றால்லும் உள்ளுக்குள் 'இந்த பைசா நாளைக்குள் எனக்கு வந்துவிடும்' என்று நினைத்தே கொடுத்தேன். ஆச்சரியம் மறுநாள் நான் டிக்கெட் எடுக்கும் போது நடத்துனர் எனக்கு ரூ.3 க்கு பதிலாக ரூ.2 டிக்கெட் கொடுக்க அதை மாற்றி கேட்க கூட அவகாசம் தராமல் அவர் நகர நா இறங்க வேண்டிய நிறுத்தமும் வர..........
இவரை போல நல்லது கேட்டதை சொல்லி தரும் குரு உலகில் வேறு எங்கு இருக்கிறார்.

அண்ணன்னாக
அண்ணன் என்பவன் தனது தம்பி தங்கைகளுக்கு இன்னொரு அப்பா. தங்கைளை பொறுப்புடன் பாதுகாக்கும் பாதுகாவலன்.
ஒரு நாள் நான் அலுவலகத்திற்கு போகும் போது இரவில் பெய்த மழையால் 20,30 அடி தூரம் ரோட்டில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நின்றது. எதை எப்படி கடந்து போவது என்று யோசிக்கும் போது அங்கு ஒரு tractor வந்தது. அந்த tractor ஓட்டுனர் உதவிக்கு வந்தார் நானும் சரி என்று ஏறிக்கொண்டேன். 60 அடி தூரத்தில் தான் எங்கள் அலுவலகம் இருந்தது. அவர் என்னை அலுவலகத்துக்கு அருகில் இறக்கி விடுகிறேன் என்றார் நானும் சரி என்றேன் ஆனால் எங்கள் அலுவலகம் அருகில் வந்ததும் நான் வண்டியை நிறுத்த சொல்லியும் நிறுத்தாமல் போனார்.அப்போது அவர் முகமும் கொஞ்சம் மாறியது. எனக்கு ஒரு நிமிடம் பயம் வந்துவிட்டது. அப்போது என்றும் இல்லாத ஆச்சிரியமாக எங்க அலுவலகத்திற்கு அருகில் ஒரு police inspector நின்று கொண்டு இருந்தார். அந்த tractor காரர் திடீரென்று அங்கு வந்த police inspector பார்த்ததும் உடனே என்னை இறக்கி விட்டுட்டு (அந்த police inspector அருகில்!!!!!) இறக்கிவிட்டுட்டு திரும்பி பார்க்காமல் போனார்.

என் அக்காவாக
அண்ணன் பாதுகாவலன் என்றல் அக்கா உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் நல்ல தோழி.
என் friends, சொந்தகார்கள், தெரிந்தவர்கள் என்று யார் நினைவாது திடீரென்று வரும். அவர்களை நினைத்து கொண்டு இருக்கும் போதே அன்றோ அல்லது மறுநாளோ அவர்கள் என் கண் முன் வந்து நிற்பார்கள். என் friend உஷா ஈரோட்டில் இருகிறாள். 2 நாட்களாக அவளது ஞாபகம் வந்து வந்து போனது. அன்று மாலை போன் பேச நினைத்தேன். ஆச்சரியம் அன்று மாலை அவளே எங்கள் வீட்டுக்கு வந்து எப்படி டி இருக்கே என்று கேட்கிறாள்?

தெய்வமாக
எனக்கு கஷ்டங்கள் வரும் பொது மலைக்கோட்டைக்கு போயீ தாயுமானவர் முன் நின்று அழுவேன். அப்போது அவரே வந்து எனக்கு ஆறுதல் சொல்லுவது போல என் மனம் உணரும். கொஞ்ச நேரம் / நாட்களில் அந்த கஷ்டமும் மறையும். பட்ட கஷ்டதுககு ஏற்ப மகிழ்ச்சியும் கிடைக்கும்.

தாயுமானவர் பற்றியும், அவர் பெருமக்களை பற்றியும் சொன்னால் அது ஒரு முடிவு இல்லாத அதிசயமாக தான் இருக்கும். என் இன்பமும் அவராலே, துன்பமும் அவராலே. அவர் இன்றி நான் இல்லை என்பதே உண்மை. ஓம் நாம சிவாய

புதன், 1 ஜூலை, 2009

வாழ்க வளமுடன்


நேற்று (28.06.09) திருச்சி சிதம்பரம் மஹாலில் நடந்த வேதாத்ரி மகரிஷி மனவளக்கலை-ன் பொன் விழாவிற்கு போயிருந்தேன். விழா-வை சிறப்பாக நடத்தினர். விழாவிற்கு தலைவர் SKM மயிலானந்தம் (Mayilanandam) தலைமை வகித்தார். எனக்கு பொதுவாகவே யோகா கலை பயிற்சிக்கு வரும் பலரது பேச்சுக்கள் பிடிக்காது. அவர்கள் தப்பாக எதுவும் பேச மாட்டார்கள் ஆனால் சுவாரசியம் என்று அவர்கள் பேசுவது தத்து பித்து என்று தான் இருக்கும்.

நேற்று நடந்த விழாவில் பேசியவர்கள் 'தலைவர்' 'தலைவர்' என்று தாங்கினாலும் அவரை பற்றி பெருமையாக எதுவும் பேசவில்லை. கடைசியில் தலைவர் பேசினார். அவர் 50 ஆண்டுகளில் மகரிஷியோடு நன்கு பழகியதை முதலில் சொல்லும் பொது மகரிஷி பற்றி பல தகவல்களை தருவார் என்று ஆவலோடு எதிர் பார்த்தேன். ஆனால் அவர் மகரிஷி பற்றி ஒரு 10% தான் பேசி இருப்பார். மீதம் 90% அவர் மகரிஷிக்கு எப்படி உதவி செய்தார் என்பதையும் தன்னால் நமது மனவளக் கலை மன்றம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்து உள்ளது என்பது பற்றயுமே இருந்தது.

அவரது பேச்சிலிருந்து சில
1. உடல் நலம்: உடல் என்பது அஸ்திவாரம். உடல் நல கோளாறு நம்மையும், நம்மை சுத்தி இருபவர்கயும் கஷ்ட படுத்துகிறது. நமது மகரிஷி எளிமையான பயிற்ச்சிகள் மூலம் அனைவரும் கற்கும் படி செய்துள்ளார். பிறருக்கு சேவை செய்வதற்கு முன் நமக்கு நாமே உடல் பயிற்சி செய்வது மூலம் சேவை செய்து கொள்ள வேண்டும் .

2. மனம்: மனம் என்பது எண்ணங்களின் குவியல். மன நலகுறைவு ஒருவரையும் அவரை சார்ந்தோரையும் அழித்து விடுகிறது.கோபத்தால், மன அழுத்தத்தால் இதயம், நரம்பு, இரத்தம், சுரப்பிகள், ஜீரண உறுப்புக்கள், திசுக்கள் ஆகிய அணைத்து உறுப்புகளுமே சீர்குலைந்து விடும் .

a. மனதின் தரம் = மனிதனின் தரம்
நாம் விடைத்த விதைகளே இன்பமும், துன்பமும், இதன் பலன்கள் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மை வந்தே சாரும் .
b. சாதாரண அறிவு - எப்படி வாழ்வது, எப்படி வாழ்க்கை நடத்துவது.
பேரறிவு - நான் யார், இறை நிலை என்றால் என்ன, அதனோடு எப்படி சேர்வது
b. அறியாமை - தீய எண்ணங்கள், தீய சொற்கள், கோபம், பொறாமை வர
காரணம் அறியாமையே
c. விருப்பு , வெறுப்புக்கு காரணம் நமது மனமே .
d. இதயம் அன்பால் நிறைய வேண்டும்
e. அமைதியான மனம் ஆராய்ந்து முடிவு எடுக்கும், விவேக சக்தி பெரும், கரும நெறிப்படி வாழ வழி செய்யும்
f. குணங்கள்
மிருக குணம் - சோம்பேறித்தனம், பிறரை கஷ்ட படுத்தி வாழ்வது,
மனித குணம் - சுறுசுறுப்பு, ஆசை, பேராசை,
தெய்வீக குணம் - அன்பு, கருணை, சேவை, இன்சொல், பணிவு
g. சிறந்தது அறவறமா? துறவறம்?
அவர் அவர் நிலைகளின் ஒழுக்க நெறி படி வாழ்வதே சிறந்த அறம் ஆகும் .
i. Insurance - ஆன்மீக இன்சூரன்ஸ் மட்டுமே பலனை உங்களுக்கே கொடுக்கும்.
இவை எல்லாம் மகரிஷி சொன்னவை தான்.

தலைவரின் டாப் 5 (+)
1. ஆசிரியர், பேராசியர்களை கௌரவித்தல் - (தனது சொந்த செலவில் )
2. நவீன நடைமுறைக்கு ஏற்ப C.D போட்டது
3. மனவள கலையை ஆன்மீக கல்வியாக மாற்ற பல்கலைகலகங்களுடன் சேர்ந்தது (Dimploma, B.A., M.A., M.Phil)
4. நிர்வாக பொறுப்பை பிரித்து பிரித்து கொடுப்பது
5. 2 வருடங்களில் இதை எல்லாம் செய்தது

தலைவரின் top 5 (-)
1. பணம், பொருள் இருக்கும் நபர்களிடம் நிர்வாக பொறுப்பு போகிறது(management trusteee - நிர்வகிப்பவர், permenant trustee - மன்றங்களுக்கு இடத்தை தருபவர், donor trustee - குறிப்பிட்ட அளவு நன்கொடை தருபவர் - இவர் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற படுவார், etc).
2. தலைவரே தன புகழை அதிகமா பாடுகிறார். மேலும் பணம் கொடுத்து பொறுப்பு பெறுபவர்களுக்கு சில உரிமைகளும் கொடுக்க பட வேண்டும். ஆதலால் இனி வரும் நிர்வாகிகளிடம் பழைய சேவை மனப்பான்மை இனி அரிதாக இருக்கலாம்
3. சேவை செய்பவர்களின் பொறுப்பை அதிக படுத்துவதால் அவர்களால் மன்றங்களுக்கு வரும் நோக்கம் மாறுகிறது.
4. ஆசான் விரும்பிய தனி மனித அமைதி இப்ப அவரிடம் (தலைவரிடம்)இருகிறதா என்று தெரியலை. மற்ற நிர்வாகிகளுக்கு எப்படி வரும்?
5. Matric School, College-கு ஆட்களை பிடிப்பதை போல Diplamo, Degree course க்கு ஆட்களை பிடிக்க ஆசிரியர்களை நிர்பந்தித்தல்.

மகரிஷி - தலைவர் ஒற்றுமை
எனக்கு தெரிந்து ஒன்னும் இல்லை.

மகரிஷி - தலைவர் வேற்றுமை.
மகரிஷி -தனது இந்த யோகா கலை மூலமாக மனிதன் உயர்ந்த நிலைய அடைய பெரிதும் சிரம பட்டார் .
தலைவர் - இந்த யோகா கலை உலகத்துக்கு பிரபல படுத்தவே பெரிதும் சிரம படுகிறார். (இப்ப இருக்கும் கல்விகள் ஒரு வியாபாரமகவே இருக்கிறது. இவரும் இந்த யோக கலையை அந்த வியாபார கூட்டத்தில் சேர்க்க பெரிதும் ஆசை படுகிறார் )

ஒரு மனவளக் கலை மன்றத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் ஆசான் என்றோ, குரு என்றோ அழைப்பது பொருத்தமாக இருக்கும். அவர் தன்னை தலைவர் தலைவர் என்று அழைப்பதின் மூலம் அவரின் தலை கணமே அதிகம் ஆகுவது போல இருக்கு.


இது எல்லாம் உயர்வான புனித யோக கலையின் மகத்துவத்தையும் மகரிஷியின் நோக்கங்களையும் தாழ்த்தாமல் இருக்க வேண்டும்

வாழ்க வளமுடன்