சனி, 29 ஆகஸ்ட், 2009

திருச்சியை ரசிப்போம் வாங்க - அழைப்பு 2

எத்தனை வாய்க்கால்கள், குளங்கள், ஆறுகள். இவற்றில் எல்லாம் நீர் இருக்கும் போது எவ்வளவு அழகு எங்கள் திருச்சி.

இத்தனை புகழுக்கும் சொந்த காரர் ஒருவரே. அவர் தான் மாமன்னர் கரிகாலச் சோழர். கல்லணையை கட்டியவர் நாடு சிறப்புற நீரை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல் படுத்தியவர். அப்போது உறையூர் தான் சோழ நாட்டின் தலைநகராக இருந்தது.

மேலும் அக்கால மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய பெரிய கோவில்களையும், அதில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளையும் இந்நாளில் யாரால் செய்ய முடியும்? எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியா புகழுடைய கோவில்கள் அல்லவா அவைகள்? தலை நகரத்திற்குரிய அழகு என்றும் அழியாத அழகாய் இன்றும் அக்கோவில்கள் திருச்சியை அழகு படுத்திகொண்டு இருக்கின்றன.

ஆறுகளையும், குளங்களையும் வெட்டியதும் கோவில்கள் கட்டியதும் சோழ மன்னர்களாக இருந்தாலும், பின்னாளில் வந்த பல மாமன்னர்கள் அதாவது, பாண்டிய மன்னர்களும், பல்லவ மன்னர்களும் கோவில்களை மேலும் பெரியதாகவும், சிறப்புடையதாகவும் வளர்த்தனர் என்பது இக்கோவில்களில் உள்ள தூண்களையும் , சிற்பங்களையும் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில்களை பற்றி இங்கு பார்ப்போம்.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

திருச்சியை ரசிப்போம் வாங்க - அழைப்பு 1


நீங்க ஒரு ஆன்மீகவாதியாகவோ , ரசனையாளராகவோ இருந்தால் எங்க ஊர் உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி! காவேரி!

பூவர் சோலை மயிலாடப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய
நடந்தாய் வாழி! காவேரி!
காமர் மாலை அருகசைய
நடந்த வெல்லாம், நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே
அறிந்தேன் வாழி! காவேரி!

பழம்பெரும் காலத்தில் சிலப்பதிகாரத்தில் பாட பட்ட பாடல் இது.

காவிரி பெண் கன்னி பருவம் வந்ததும் தன் காதலனோடு சேர குதுகலத்துடனும், பூரிப்புடனும் வாருவாள். அப்போ அவளுக்கு குயில்கள் காதல் பாட்டிசைத்தும் செவிலி தாய்மார்களான புன்னை மரங்களும், கடம்ப மரங்களும் மஞ்சள், சிவப்பு வண்ண மலர்களை சூடி, பச்சை பட்டுடித்தி, பல மணங்களால் அவளை மேலும் அழகு படுத்தியும் காவிரி பெண்ணை சந்தோசப்படுத்தி சந்தோசப்பட்டனர். சந்தோஷம் அவளுக்கு மட்டும் தானா? அவள் போகும் இடமெல்லாம் பஞ்சம் என்னும் பகைவனை அழித்துக் சென்றதால் மக்களும் அல்லவோ சந்தோசத்தில் இருந்தனர்.

அதனால் தானே சுந்தர சோழ மன்னரின் செல்வப் புதல்வியும், ராஜராஜனுடைய புதல்வன் ராஜேந்திரனை எடுத்து வளர்த்து வீராதி வீரனாயும் மன்னாதி மன்னனாயும் ஆக்கிய தீரப் பெண்மணி குந்தவைக்கூட
'இந்தப் பொன்னி நதி பாயும் சோழ நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்குப் போகப் பிடிக்கவேயில்லை! எனக்கு திருமணம் ஆனாலும் நான் சோழ நாட்டை விட்டு போவதில்லை' என்று சபதம் எடுத்துக் கடைசிவரை அதுபோலவே வாழ்ந்து காட்டினாள்

இன்று அந்த செவிலி தாய்மார்களை நாம் கொன்றதலோ என்னவோ காவிரி பெண்ணுக்கு எங்கள் ஊர் பக்கம் வர பிடிக்காமல் மேகமாகி நேரிடையாக தன் மணாளனோடு சேர்கிறாள்.

என்ன இருந்தாலும் அவள் தாய் அல்லவா? அதான் வருடத்தில் சில நாட்கள் மட்டுமாவது வந்து நம்மை வாழ வைக்கிறாள்.

ஆனாலும் இன்றும் திருச்சியில் திரும்பிய பக்கமெல்லாம் ஆறு, வாய்க்கள்,குளங்கள், குட்டை கள் இருக்கின்றன. ஆனால் அவற்றின் அழகு மழைகாலங்களிலும், காவிரி தாயின் வருகையின் போது மட்டுமே தெரிகின்றன.

மற்ற நேரங்களில் தாயில்லா குழந்தைகளை போல அழுக்காகவும், கவனிப்பார் அற்றும் இருக்கும்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

இயற்கையை பாதுகாப்போமா?

நாம் இன்று இருக்கும் சூழ்நிலையில் மரம் வெட்டுவது குற்றம், மணல் அள்ளுவது குற்றம் என்று எல்லாம் பேசுகிறோம். இவற்றை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் மரம் வெட்டுபவரையும், மணல் அள்ளுபவரையுமே குற்றம் சொல்லுவதும் குற்றம்.

ஏனெனில் மரம் வெட்டுபவரோ, மணல் அள்ளுபவரோ, அல்லது அவற்றை விற்பவர்களோ அவற்றை எல்லாம் தங்கள் சொந்த உபயோகத்திருக்கே பயன் படுத்துவது இல்லை. இந்த திருட்டு மணலும், மரமும் எங்கு போகின்றன? கடைசியாக தனி மனித விருப்பத்திற்கே வந்தடைகிறது.

இப்பல்லாம் எல்லாரும் தனி வீடு, அதுவும் மாளிகை போல வீடு கட்டி அதில் வசிக்கவே ஆசைபடுகின்றனர். உங்கள் அனைவருக்கும் தெரியும். மணலோ, மரமோ இல்லாமல் வீடு கட்ட முடியாது. அதே போல மரத்திற்கு பதிலாக எத்தனையோ மாற்று பொருள்கள் வந்தாலும் மர பொருட்களையே(கட்டில், டேபிள், etc..) மனிதன் விரும்பிகிறான்.

மரம், மணல் பற்றிய குற்றம் குறைய வேண்டுமானால் முதலில் இந்த தனி மனித குணம் மாற வேண்டும்.

1. எளிய வீட்டில் வசிக்க அனைவரும் முன்வர வேண்டும்.

2. மரப் பொருட்களை பயன் படுத்துவடை தவிர்க்க வேண்டும்.

இதை ஒவ்வருவரும் பின் பற்றினால் மணலும், மரமும் வாங்க ஆள் இல்லாமல் அவைகள் அந்த அந்த இடங்களிலே மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால் இது ஒருநாளும் நடக்காத செயல். சிறிது சிறிதாக பணம் சேர்த்து பெரிய வீடு கட்டும் ஒருவரிடம் உங்களால் தான் மரம், மண் வளம் பாத்திப்படைகிறது என்றால் அருவாள் தூக்கி கொண்டு வெட்ட வருவான்.

மேலும் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூட்டு குடும்ப முறை மாற்றமும், சொந்த வீடு கனவும் பெருகுகிறது. இதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதல்ல.

என்னால் முடிந்தது என் கொள்கைகளின் பட்டியலில் மேற்சொன்னவற்றை சேர்த்து கொண்டது தான். (அதாவது எளிமையே இனிமை) என் வாழ்க்கை துணையும் இதேபோல இருந்தால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

எதற்கு இந்த தலைப்புக்கள்?

தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் ஓட்டு வாங்க இல்லாத சேட்டை செய்வார்கள். இந்த பதிவுலகத்திற்கு திடீரென்று என்ன வந்துவிட்டது? ஆளாளுக்கு ஆன்மிகம், சமயம்,சம்பிரதாயம், கடவுள் என்ற ஒரு உணர்வு பூரணமான தலைப்பை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார்கள்?

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வில் பல அற்புத அனுபவங்களை உணர்ந்து இருப்பார்கள். ஆதலால்தான் கடவுள் இல்லை என்றும், அவரை கேலியாக பேச ஆரம்பித்தால் எங்களால் தாங்க முடியாமல் துள்ளி குதித்து பேச ஆரம்பிப்போம்.

ஆன்மீகவாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை வாங்குவர், சிவன், சக்தி, பெருமாள், பிள்ளையார், முருகர், etc

நான் சிவ பெருமானை முழுதாக நம்புபவள். ஈசனை வணங்குவோர்க்கு கிடைக்கும் ஒரு அற்புத சக்தி உள்ளுணர்வு அதாவது ஒரு செயல் நடப்பதற்கு முன்னரே இது சரியாக நடக்கும், இது தவறாக நடக்கும் என்றும், ஏதோ ஒரு நல்லது /கெட்டது நடந்துள்ளது, நடக்க இருக்கிறது என்பது மனது கூறும். இதனை உள்ளுணர்வு / Intuition என்பர்.

பொதுவாக யோகா செய்பவர்க்கும், எதையும் ஆழ்ந்து தெளிவாக நடைமுறைக்கு ஏற்ப முடிவெடுப்பவருக்கும் இந்த உள்ளுணர்வு ஓரளவு இருக்கும். ஆனால் சிவ பெருமானை வணங்கும் பெரும்பாலனவர்க்கு இந்த அபூர்வ உள்ளுணர்வு எளிதாக கிடைக்கிறது.
நடக்கும் நடக்காது என்பதை ஓரளவு எங்களுக்கு முன்னரே தெரிந்து விடுவதால் முடிவுகள் எப்படி இருந்தாலும், அல்லது எது எப்படி நடந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்ள முடிகிறது.
மேலும் அதனை நல்ல முறையில் பயன்படுத்தும் வரை உள்ளுணர்வு நம்மிடமே இருக்கும்

என் தோழி மகேஸ்வரி. அவர் சிவ பெருமான் மீது அதீத பக்தியோடு இருப்பவள். அவள் வசிப்பது ஒரு பக்க பட்டிகாடு. அவள் அப்பா சிவன் கோவில் பூசாரி.
ஒருமுறை செமெஸ்டர் (Accountancy paper)எக்ஸாம் போது அவள் என்னிடம் Exam Hall போவதற்கு 15 நிமிடத்திற்கு முன் ஒரு 12 மார்க்ஸ் கேள்வியை காண்பித்து இதை படி என்றால். நானும் படித்தேன். அதிசயம் அந்த கேள்வி எக்ஸாம்ல் வந்து. அந்த பரிச்சையில் நா எடுத்த மதிப்பேன் 42! (pass marks is 40). அவளிடம் எப்படி உனக்கு இது தெரியும் என்றால் அவள் சொன்ன ஒரே பதில் உள்ளுணர்வு. Avarage மாணவியாக இருந்தவள் இன்று CA முடித்து ஆடிடோர்-ஆக இருக்கிறாள். இதற்கு அவள் சொல்லுவது 'எல்லாம் அவன் செயல்'. இது போல என் வாழ்க்கையிலும் பல பல அனுபவங்கள் இருக்கு. ஒவ்வொரு ஆன்மீகவாதிகள் வாழ்க்கையிலும் பல பல அதிசயங்கள் நடந்து இருக்கு.

இந்த உணர்வில் லயித்தவர்கள் சிலர் வெளியில் வர விருப்பம் இல்லாமல் அந்த அதிசயத்தில் கலந்து விடுவர். அதாவது சிவ சித்தராகி விடுவர். (நாத்திகர் பாசையில் பைத்தியங்கள்)

ஆனால் இது எதுவுமே நடக்காத/உணராத நாத்திகவாதிகள் இறைவன் இல்லை. அவன் கல், காளான் என்று எல்லாம் பேசுகிறார்கள்!!!!! ??????

நாத்திகவாதிகளுக்கு கடவுள் இல்லை என்று சொல்வதிலும், எங்களுடன் விவாதம் என்ற பெயரில் எல்லாம் தெரிந்தவர்கள் போல பேசுவதிலும் ஒரு சந்தோசம்.

மேலும் வால் பையனின் விவாதத்தில் கலந்து கொண்டதிலிருந்து நா தெரிந்து கொண்டவை,

1. இறை உணர்வை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இன்னும் இவர்களுக்கு வரவில்லை. (அப்படி விளக்க போனால் அது விவாதமாகி எனது அன்றைய நாள் வேலைகளும், படிப்பும் கேட்டு போகிறது)

2. அப்படியென்றால் கடவுள், ஆன்மீக போன்றவற்றை எப்படி இவர்களுக்கு தெரியவைப்பது என்றால்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில்தான் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் அது போல சூழ்நிலை வரும். அப்போது அவர்களே அதை தெரிந்து கொள்வர்.
அதுவரை அவர்களை பொறுத்தவரை நான் (ஆன்மீகவாதி) பைத்தியமாகவே இருந்துவிட்டு போறேன்.

என் பதிவுலக நண்பர்களே இனி யாரும் என்னை ஆன்மிகம் சார்ந்த விவாதத்திருக்கு அழைக்க வேண்டாம்.

சனி, 1 ஆகஸ்ட், 2009

நம் கலாச்சாரம் ஒரு நாளும் அழியாது

18.07.09 அன்று நானும் என் அம்மாவும் என் அக்கா வீட்டிற்க்கு (ஈரோடு) சென்றோம். பிறகு அங்கிருந்து கர்நாடக எல்லையில் இருக்கும் மாதேஸ்வரன் மலைக்கு சென்றோம். மிகவும் அற்புதமான இயற்கை சூழலில் இருக்கும் அந்த மலை கோவிலுக்கு எங்க ஊர்காரர்கள் (ராசிபுரம், சேலம், ஈரோடு) பல காலமாக (கிட்ட தட்ட 60,70 வருடங்களாக) வருடம் தவறாமல் போயி வருகிறார்கள். என் அக்காவின் மாமனார், மாமியார், என் அம்மா என அனைவரும் அவர்கள் சிறு வயதில் அவர்களின் தாத்தா, பாட்டியுடன் நடந்தே அந்த காட்டு மலை பாதையில் கோவிலுக்கு போயி இருக்கிறார்கள். ஒரு வார பயணமாக இருக்குமாம். இடையில் சிங்கம், புலி வந்தால் 'மாதையா காப்பாத்து , மாதையா காப்பாத்து' ன்னு கத்துவாங்கலாம். இவர்கள் கத்தலை கேட்டு (சகிக்கமலோ என்னவோ!!!) புலி, சிங்கம் எல்லாம் ஓடிடுமாம். (அப்புறமா தான் தைரியமா நம்ப வீரப்பன் அண்ணன் வந்தாங்க) சக்தி வாய்ந்த அந்த தெய்வத்தை தரிசித்துவிட்டு திரும்பும்போது மேட்டூர் போனோம்.

அங்கு நம் ஊர் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்கூடாக பார்த்தேன்.. அன்று ஞாயிற்று கிழமை ஆதலால் ஊர்க்காரர்கள் எல்லாம் அரிசி, மளிகை பொருட்களை எடுத்து வந்து அங்கேயே மீன் வாங்கி குழம்பு வச்சு சமைத்து அந்த இடத்தையே நார வச்சு இருந்தார்கள். (வாரம் வாரம் இவர்கள் செய்யும் இந்த அட்டகாசத்தையும் தாண்டி பூங்காவை நன்றாக பராமரித்து வரும் பணியாளர்களுக்கு பாராட்டுகள்). அடுத்து அங்கு இருக்கும் உயிரியல் பூங்கா (zoo) வில் இருக்கும் பாம்பை பார்த்து பக்தியோடு இவர்கள் போட்ட காணிக்கை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருது. அதுவும் சதா பாம்புக்கு காசாகவும், மலைப் பாம்புக்கு ரூபாய் நோட்டுக்கலாகவும் போட்ட இவர்களது பக்தியை என்ன வென்று சொல்லுவது???


இதெல்லாம் பார்த்த பிறகு நம் நாட்டு பண்பாடு கலாச்சாரம் கேட்டு போச்சு ன்னு சொன்னவங்க மேல கோபம் கோபமா வந்துச்சு. இப்படி பட்ட மனுசங்க இருக்கிற வரை நம் கலாச்சாரம் ஒரு நாளும் அழியாது.