திங்கள், 7 செப்டம்பர், 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்



இந்த அற்புத நாளில்(September 8th) பிறந்து,

சிறந்த அறிவாளியாகவும், தியாக சுடராகவும், புரட்சியின் சிகரமாகவும்,

நற்குணங்களின் இருப்பிடமாகவும் விளங்கும் அனைவருக்கும்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

திருச்சியை ரசிப்போம் வாங்க - ஸ்ரீரங்கம் - அழைப்பு 3


ஓம் நமோ நாராயண

பூ என்றால் அது தாமரை மலரையும்
கோவில் என்றால்
சைவத்திருக்கு (சிவன்) சிதம்பரமும்
வைணவத்திற்கு (பெருமாள்) திரு அரங்கத்தையும் குறிக்கும்.
வைணவ த்திருத்தலங்களுக்கெல்லாம் முழு முதன்மையானது ஸ்ரீரங்கம் ஆகும். அதனால் தான் இங்கு இருக்கும் பெருமாளை 'பெரியவர்' என்றே அழைப்பர் வைணவர்கள்.

கோபுர வாசல்கள் மொத்தம் ஏழு. முதல் மூன்று வாசல்களில் வீதிகள், குடியிருப்புகள், கடைகள் இருக்கும், அடுத்த நான்கு வாசல்களும் கோவிலுக்கு உரித்தானவை.


இக்கோவிலுக்கு மொத்தம் 21 கோபுரங்கள் இருக்கின்றன.


அதில் முதல் கோபுரமான ராஜா கோபுரம் ஆசியாவிலே இரண்டாவது மிக பெரிய கோபுரம் என்ற பெருமைக்குரியது. இது 17 ம் நூற்றாண்டிலே கட்ட ஆரம்பிக்கப் பட்டாலும் 1987 ம் ஆண்டு தான் கட்டி முடிக்கப் பட்டது.இக்கோபுரத்தீன் கீழ் நிற்கும் போதும் குளிந்த காற்று நம்மை வருடிச் சென்று மனதுக்கும், உடலுக்கும் ஒரு புத்துணர்வு கொடுக்கும் நிலை ஆனந்தமானது.


அக்காலத்தில் மன்னர்கள் ஏன் பெரிய பெரிய கோவில்களை கட்டி, அதனை பராமரிக்க பல ஏக்கர் நிலங்களையும் விட்டு சென்றனர்?
1. அக்காலத்தில் சிற்பம், ஓவியம், இயல், இசை, நாடகம், போன்ற பல கலைகளுக்கு புகலிடமாக கோவில்கள் இருந்தன. அதனால் தான் கோவிலுக்கு போகும் போது குளித்துவிட்டு சுத்த பத்தமா, நல்லா ஆடைகள் அணிந்து போகணும் ன்னு சொல்லுவாங்க. ஏனெனில் பல கலைகளுக்கும் புகலிடமாக இருக்கும் இடத்தில் நம் உடல் துர்நாற்றத்தினால் கலைகளை ரசிக்க வருபவர்கள் பாதிக்க கூடாதுன்னு தான் அப்படிப்பட்ட பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் நாம் இறைவன் அருள் பெற மனம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும்

சிறிய கோவில்களே கலைகளுக்கு புகலிடமாக இருந்த போது ஸ்ரீரங்கம் இருந்திருக்காதா?
கட்டுத் தரிக்கும் கவிபாடும் திறன் கொடுத்த நம் கம்பர் இங்குதான் தனது அழியா காவியமான கம்ப ராமாயணத்தை அரங்கேற்றினார். அந்த மண்டபம் இதோ..


இந்த மண்டபத்தை பார்க்கும் போது கம்பனின் புகழ் தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக 'எப்பேர்ப்பட்ட கவிஞன் தான் அழியாக் காவியத்தை அரங்கேற்றிய இடம்' என்ற நினைவு வரும். அப்போது கைகள் தானாக அவ்விடத்தை தொட்டு பார்க்க ஆசைப்படும்

கலைகளுக்கு புகலிடமாக கோவில்கள் இருந்தன
கலைகளுக்கு தலைவனாக இறைவன் இருக்கிறான்
.

அதனால் தான் இன்னும் நம் தமிழ் இசை அமைப்பாளர்கள்(A.R. ரகுமான், இளையராஜா, விஸ்வநாதன்..), பாடகர்கள்(SPP, ஜேசுதாஸ், நித்யஸ்ரீ ...) பலரும் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர்.