சனி, 14 ஆகஸ்ட், 2010

அத்தை மகனே போய் வரவா

அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
உந்தன் மனதை கொண்டு செல்லவா
எந்தன் நினைவை தந்து செல்லவா

மல்லிகை மலர் சூடி காத்து நிற்கவா
மாலை இளந்தென்றல் தன்னை தூது விடவா
நல்லதோர் நாள் பார்த்து சேதி சொல்லவா
நாட்டோரை சாட்சி வைத்து வந்து விடவா

பெண் பார்க்கும் மாப்பிள்ளை முகம் பார்க்கவா
முகம் பார்க்க முடியாமல் நிலம் பார்க்கவா
நிலம் பார்த்து மெதுவாக உன்னை நாடவா
உனை நாடி உனை நாடி
உனை நாடி உனை நாடி உறவாடவா

அத்தை மகனே போய் வரவா
உந்தன் மனதை கொண்டு செல்லவா
எந்தன் நினைவை தந்து செல்லவா