தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் ஓட்டு வாங்க இல்லாத சேட்டை செய்வார்கள். இந்த பதிவுலகத்திற்கு திடீரென்று என்ன வந்துவிட்டது? ஆளாளுக்கு ஆன்மிகம், சமயம்,சம்பிரதாயம், கடவுள் என்ற ஒரு உணர்வு பூரணமான தலைப்பை எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார்கள்?
ஆன்மீகத்தில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வில் பல அற்புத அனுபவங்களை உணர்ந்து இருப்பார்கள். ஆதலால்தான் கடவுள் இல்லை என்றும், அவரை கேலியாக பேச ஆரம்பித்தால் எங்களால் தாங்க முடியாமல் துள்ளி குதித்து பேச ஆரம்பிப்போம்.
ஆன்மீகவாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கடவுளை வாங்குவர், சிவன், சக்தி, பெருமாள், பிள்ளையார், முருகர், etc
நான் சிவ பெருமானை முழுதாக நம்புபவள். ஈசனை வணங்குவோர்க்கு கிடைக்கும் ஒரு அற்புத சக்தி உள்ளுணர்வு அதாவது ஒரு செயல் நடப்பதற்கு முன்னரே இது சரியாக நடக்கும், இது தவறாக நடக்கும் என்றும், ஏதோ ஒரு நல்லது /கெட்டது நடந்துள்ளது, நடக்க இருக்கிறது என்பது மனது கூறும். இதனை உள்ளுணர்வு / Intuition என்பர்.
பொதுவாக யோகா செய்பவர்க்கும், எதையும் ஆழ்ந்து தெளிவாக நடைமுறைக்கு ஏற்ப முடிவெடுப்பவருக்கும் இந்த உள்ளுணர்வு ஓரளவு இருக்கும். ஆனால் சிவ பெருமானை வணங்கும் பெரும்பாலனவர்க்கு இந்த அபூர்வ உள்ளுணர்வு எளிதாக கிடைக்கிறது.
நடக்கும் நடக்காது என்பதை ஓரளவு எங்களுக்கு முன்னரே தெரிந்து விடுவதால் முடிவுகள் எப்படி இருந்தாலும், அல்லது எது எப்படி நடந்தாலும் தைரியத்துடன் எதிர்கொள்ள முடிகிறது.
மேலும் அதனை நல்ல முறையில் பயன்படுத்தும் வரை உள்ளுணர்வு நம்மிடமே இருக்கும்
என் தோழி மகேஸ்வரி. அவர் சிவ பெருமான் மீது அதீத பக்தியோடு இருப்பவள். அவள் வசிப்பது ஒரு பக்க பட்டிகாடு. அவள் அப்பா சிவன் கோவில் பூசாரி.
ஒருமுறை செமெஸ்டர் (Accountancy paper)எக்ஸாம் போது அவள் என்னிடம் Exam Hall போவதற்கு 15 நிமிடத்திற்கு முன் ஒரு 12 மார்க்ஸ் கேள்வியை காண்பித்து இதை படி என்றால். நானும் படித்தேன். அதிசயம் அந்த கேள்வி எக்ஸாம்ல் வந்து. அந்த பரிச்சையில் நா எடுத்த மதிப்பேன் 42! (pass marks is 40). அவளிடம் எப்படி உனக்கு இது தெரியும் என்றால் அவள் சொன்ன ஒரே பதில் உள்ளுணர்வு. Avarage மாணவியாக இருந்தவள் இன்று CA முடித்து ஆடிடோர்-ஆக இருக்கிறாள். இதற்கு அவள் சொல்லுவது 'எல்லாம் அவன் செயல்'. இது போல என் வாழ்க்கையிலும் பல பல அனுபவங்கள் இருக்கு. ஒவ்வொரு ஆன்மீகவாதிகள் வாழ்க்கையிலும் பல பல அதிசயங்கள் நடந்து இருக்கு.
இந்த உணர்வில் லயித்தவர்கள் சிலர் வெளியில் வர விருப்பம் இல்லாமல் அந்த அதிசயத்தில் கலந்து விடுவர். அதாவது சிவ சித்தராகி விடுவர். (நாத்திகர் பாசையில் பைத்தியங்கள்)
ஆனால் இது எதுவுமே நடக்காத/உணராத நாத்திகவாதிகள் இறைவன் இல்லை. அவன் கல், காளான் என்று எல்லாம் பேசுகிறார்கள்!!!!! ??????
நாத்திகவாதிகளுக்கு கடவுள் இல்லை என்று சொல்வதிலும், எங்களுடன் விவாதம் என்ற பெயரில் எல்லாம் தெரிந்தவர்கள் போல பேசுவதிலும் ஒரு சந்தோசம்.
மேலும் வால் பையனின் விவாதத்தில் கலந்து கொண்டதிலிருந்து நா தெரிந்து கொண்டவை,
1. இறை உணர்வை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இன்னும் இவர்களுக்கு வரவில்லை. (அப்படி விளக்க போனால் அது விவாதமாகி எனது அன்றைய நாள் வேலைகளும், படிப்பும் கேட்டு போகிறது)
2. அப்படியென்றால் கடவுள், ஆன்மீக போன்றவற்றை எப்படி இவர்களுக்கு தெரியவைப்பது என்றால்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில்தான் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இவர்களுக்கும் அது போல சூழ்நிலை வரும். அப்போது அவர்களே அதை தெரிந்து கொள்வர்.
அதுவரை அவர்களை பொறுத்தவரை நான் (ஆன்மீகவாதி) பைத்தியமாகவே இருந்துவிட்டு போறேன்.
என் பதிவுலக நண்பர்களே இனி யாரும் என்னை ஆன்மிகம் சார்ந்த விவாதத்திருக்கு அழைக்க வேண்டாம்.
வியாழன், 13 ஆகஸ்ட், 2009
சனி, 1 ஆகஸ்ட், 2009
நம் கலாச்சாரம் ஒரு நாளும் அழியாது
18.07.09 அன்று நானும் என் அம்மாவும் என் அக்கா வீட்டிற்க்கு (ஈரோடு) சென்றோம். பிறகு அங்கிருந்து கர்நாடக எல்லையில் இருக்கும் மாதேஸ்வரன் மலைக்கு சென்றோம். மிகவும் அற்புதமான இயற்கை சூழலில் இருக்கும் அந்த மலை கோவிலுக்கு எங்க ஊர்காரர்கள் (ராசிபுரம், சேலம், ஈரோடு) பல காலமாக (கிட்ட தட்ட 60,70 வருடங்களாக) வருடம் தவறாமல் போயி வருகிறார்கள். என் அக்காவின் மாமனார், மாமியார், என் அம்மா என அனைவரும் அவர்கள் சிறு வயதில் அவர்களின் தாத்தா, பாட்டியுடன் நடந்தே அந்த காட்டு மலை பாதையில் கோவிலுக்கு போயி இருக்கிறார்கள். ஒரு வார பயணமாக இருக்குமாம். இடையில் சிங்கம், புலி வந்தால் 'மாதையா காப்பாத்து , மாதையா காப்பாத்து' ன்னு கத்துவாங்கலாம். இவர்கள் கத்தலை கேட்டு (சகிக்கமலோ என்னவோ!!!) புலி, சிங்கம் எல்லாம் ஓடிடுமாம். (அப்புறமா தான் தைரியமா நம்ப வீரப்பன் அண்ணன் வந்தாங்க) சக்தி வாய்ந்த அந்த தெய்வத்தை தரிசித்துவிட்டு திரும்பும்போது மேட்டூர் போனோம்.
அங்கு நம் ஊர் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்கூடாக பார்த்தேன்.. அன்று ஞாயிற்று கிழமை ஆதலால் ஊர்க்காரர்கள் எல்லாம் அரிசி, மளிகை பொருட்களை எடுத்து வந்து அங்கேயே மீன் வாங்கி குழம்பு வச்சு சமைத்து அந்த இடத்தையே நார வச்சு இருந்தார்கள். (வாரம் வாரம் இவர்கள் செய்யும் இந்த அட்டகாசத்தையும் தாண்டி பூங்காவை நன்றாக பராமரித்து வரும் பணியாளர்களுக்கு பாராட்டுகள்). அடுத்து அங்கு இருக்கும் உயிரியல் பூங்கா (zoo) வில் இருக்கும் பாம்பை பார்த்து பக்தியோடு இவர்கள் போட்ட காணிக்கை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருது. அதுவும் சதா பாம்புக்கு காசாகவும், மலைப் பாம்புக்கு ரூபாய் நோட்டுக்கலாகவும் போட்ட இவர்களது பக்தியை என்ன வென்று சொல்லுவது???
இதெல்லாம் பார்த்த பிறகு நம் நாட்டு பண்பாடு கலாச்சாரம் கேட்டு போச்சு ன்னு சொன்னவங்க மேல கோபம் கோபமா வந்துச்சு. இப்படி பட்ட மனுசங்க இருக்கிற வரை நம் கலாச்சாரம் ஒரு நாளும் அழியாது.
அங்கு நம் ஊர் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்கூடாக பார்த்தேன்.. அன்று ஞாயிற்று கிழமை ஆதலால் ஊர்க்காரர்கள் எல்லாம் அரிசி, மளிகை பொருட்களை எடுத்து வந்து அங்கேயே மீன் வாங்கி குழம்பு வச்சு சமைத்து அந்த இடத்தையே நார வச்சு இருந்தார்கள். (வாரம் வாரம் இவர்கள் செய்யும் இந்த அட்டகாசத்தையும் தாண்டி பூங்காவை நன்றாக பராமரித்து வரும் பணியாளர்களுக்கு பாராட்டுகள்). அடுத்து அங்கு இருக்கும் உயிரியல் பூங்கா (zoo) வில் இருக்கும் பாம்பை பார்த்து பக்தியோடு இவர்கள் போட்ட காணிக்கை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருது. அதுவும் சதா பாம்புக்கு காசாகவும், மலைப் பாம்புக்கு ரூபாய் நோட்டுக்கலாகவும் போட்ட இவர்களது பக்தியை என்ன வென்று சொல்லுவது???
இதெல்லாம் பார்த்த பிறகு நம் நாட்டு பண்பாடு கலாச்சாரம் கேட்டு போச்சு ன்னு சொன்னவங்க மேல கோபம் கோபமா வந்துச்சு. இப்படி பட்ட மனுசங்க இருக்கிற வரை நம் கலாச்சாரம் ஒரு நாளும் அழியாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)