சனி, 29 ஆகஸ்ட், 2009

திருச்சியை ரசிப்போம் வாங்க - அழைப்பு 2

எத்தனை வாய்க்கால்கள், குளங்கள், ஆறுகள். இவற்றில் எல்லாம் நீர் இருக்கும் போது எவ்வளவு அழகு எங்கள் திருச்சி.

இத்தனை புகழுக்கும் சொந்த காரர் ஒருவரே. அவர் தான் மாமன்னர் கரிகாலச் சோழர். கல்லணையை கட்டியவர் நாடு சிறப்புற நீரை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல் படுத்தியவர். அப்போது உறையூர் தான் சோழ நாட்டின் தலைநகராக இருந்தது.

மேலும் அக்கால மன்னர்களால் கட்டப்பட்ட பெரிய பெரிய கோவில்களையும், அதில் உள்ள சிற்ப வேலைப்பாடுகளையும் இந்நாளில் யாரால் செய்ய முடியும்? எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழியா புகழுடைய கோவில்கள் அல்லவா அவைகள்? தலை நகரத்திற்குரிய அழகு என்றும் அழியாத அழகாய் இன்றும் அக்கோவில்கள் திருச்சியை அழகு படுத்திகொண்டு இருக்கின்றன.

ஆறுகளையும், குளங்களையும் வெட்டியதும் கோவில்கள் கட்டியதும் சோழ மன்னர்களாக இருந்தாலும், பின்னாளில் வந்த பல மாமன்னர்கள் அதாவது, பாண்டிய மன்னர்களும், பல்லவ மன்னர்களும் கோவில்களை மேலும் பெரியதாகவும், சிறப்புடையதாகவும் வளர்த்தனர் என்பது இக்கோவில்களில் உள்ள தூண்களையும் , சிற்பங்களையும் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில்களை பற்றி இங்கு பார்ப்போம்.