திங்கள், 24 மே, 2021

கொரோனா

வீட்டுக்குள்ளே இருக்கிற எனக்கு பூரணிக்கு பிரேமா க்கெல்லாம் எப்படி கொரானா வருது என்பது அதிசயமா தான் இருக்கு. நல்ல வேளை. எனக்கு பாதிப்பு குறைவு தான். உள்காய்ச்சல், உடல் வலி, தலை வலி எல்லாம் வந்தாலும் எப்படியோ தப்புச்சி வந்துட்டேன். 5 days எந்த வாசனையும் சுத்தமா தெரியல. அது வச்சி தான் எனக்கு கொரோனா தான் வந்து இருக்கு ன்னு தெரிஞ்சுகிட்டோம். இதுல நான் தாயுமாவருக்கு 2 நன்றி சொல்லணும். 1. குடும்பத்தில் நோய் பரவாமல் காப்பாற்றியதற்கு 2. கொரோனா வந்தா நல்லா சாப்பிடணுமாம். 2 மாதமா எங்க வீட்ல பழங்கள் இருந்து கிட்டே இருக்கும். அதுவும் எனக்கு பிடிச்ச தேன் வாழை. நானே தினமும் 2, 3 சாப்பிடும் அளவிற்கு இருந்துச்சி. free ஆகவும், ரொம்ப ரொம்ப குறைந்த விலையிலும் எங்களுக்கு அவ்வளவு பழம் கிடைச்சது. அப்புறம் காளான் வளர்க்கலாம்ன்னு வளர்த்து மார்ச், ஏப்ரல் ல அறுவடை செய்து கிட்ட தட்ட 1.7 kg காளான் நாங்களே சாப்பிட்டோம். நான் ஏதோ கொஞ்சம் strength ah இருந்து வெளியே யாருக்கும் சொல்லாமலே கோரோனா வை face பண்ணினேன் என்றால் அது கடந்த 2 மாதத்தில் நான் சாப்பிட்ட இந்த பழம், காளான் கொடுத்த பலம் தான் காரணம். கண்டிப்பா இது தாயு கருணை இல்லாம எங்களுக்கு கிடைச்சு இருக்காது. நோய் வரும் முன்னே எங்களை தயார் படுத்திய அவர் அன்பை எப்படி சொல்லுவது..

நிரு குட்டி

உண்மையில் நிரு குட்டி கடவுள் கொடுத்த வரம். குழந்தையில் அவன் உருவம் அழகோ அழகு. வளர வளர அவன் குணம் அழகோ அழகு. நிவி யோட selfish பேச்சை கேட்கும் போது எங்களுக்கு வரும் சோகத்தை ஆற்றுவதே நிருவின் பேச்சும் செயலும் தான். ஒரு குழந்தை நல்லவனா மாறுவதும் கெட்டவனா மாறுவதும் அன்னை வளர்ப்பு சொல்லுறாங்க. நான் நிவி க்கு நிறைய நிறைய நிறைய advice வாயிலும், கையிலும் சொல்லி வளர்க்கிறேன். இருந்தாலும் அவனோட அந்த selfish, பயம், தற்பெருமை இதெல்லாம் கொஞ்சமும் குறைய மாட்டேங்குது. நிரு குட்டிக்கு இது வரைக்கும் ஒரு advice கூட சொன்னது இல்லை. ஆனா பொறுப்பா தைரியமா, அன்பானவனா, தற்பெருமை தன்னலம் இல்லாதவனா இருக்கிறான்.. நிரு வை நினைத்தாலே நிறைவு தான்..

சனி, 16 ஜனவரி, 2021

கடவுளின் வரங்கள் 1

உண்மையில் நான் போன பிறவியில் என்ன புண்ணியம் செய்தேன்னு தெரியல, தாயுமானவர் என்கூடவே இருந்து எனக்கு தேவையானவற்றை எல்லாம் கொடுக்கிறார். அவர் கொடுத்த 3 வரங்கள் என் கணவர், என் 2 குழந்தைகள். என் நிவேதனின் very special character 1. அவனின் வைராக்கியம் (சிலர் அதை பிடிவாதம், முரட்டு குணம் னு சொல்லுவாங்க ) நிவேதன் 2.9 வயது வரை பகலிலும் நல்லா தூங்குவான். அதுவும் தூக்கம் வந்துட்டா இடம், நேரம் பார்க்காமல் தூங்குவான். அவன் Pre KG போன போது பள்ளியில் என்ன நடந்ததுன்னு தெரியல.. வீட்டுக்கு வந்து 3 4 நாட்களாக "நான் பகலில் தூங்க மாட்டேன்ம்மா" ன்னு அடிக்கடி சொல்லிகிட்டே இருந்தான். நானும் "சரி தூங்கவில்லை என்றாலும் பரவாயில்ல " என்றேன். "miss சொன்னாலும் தூங்க மாட்டேன்" என்றான். நானும் "miss கிட்ட நான் school க்கு தூங்க வரவில்லைன்னு" சொல்லு என்றேன். நான் விளையாட்டா தான் சொன்னேன்.. என்ன நடந்ததோ, அவன் சொன்ன அந்த நாளில் இருந்து இப்போது வரை அவன் பகலில் தூங்குவது இல்லை! 2. 1st std ல நிவி 4th rank. நிரு குட்டி 1st rank. Annual Day ல நிரு prize வாங்கியதை பார்த்து நிவி "அடுத்த வருடம் நான் தான் 1st rank வாங்குவேன். இவன் 4th rank வாங்குவான்" ன்னு 2 3 தடவ சொன்னான். அவன் சொன்னது போலவே அடுத்த வருடத்தில் இருந்து 1st rank தான் எடுக்கிறான். அதுவும் 20, 30 marks leading ல்... 3. நிவி சரியான சாப்பாடு பிரியன். ஆனால் இந்த 10 வயதில் அவன் weight 40 kg.. நானும் அவங்க அப்பாவும் சாப்பாடு குறைக்க சொல்லும் போது கேட்கல. நிரு, பாலா, காகினியும் அவனை குண்டன் என்று கிண்டல் செய்யும் போது என்கிட்ட சொன்னான். நான் "இவர்களை நான் கேட்பேன். நீ ஸ்கூல் போகும் போது school ah எல்லாரும் உன்னை கிண்டல் செய்வார்களே? அப்ப என்ன செய்வே? " என்றேன். மறுநாளிலிருந்து அவன் diet start பண்ணினான்! அவன் diet control பார்த்து இவனால எப்படி இப்படி இருக்க முடியுது னு எனக்கே பிரமிப்பா இருக்கு... இப்போ CA ஆவேன் என்று சொல்லும் இவன், கண்டிப்பா இன்னும் நிறைய சாதிப்பான்.

புதன், 13 ஜனவரி, 2021

Drawing

 தினத்தந்தி சிறுவர் மலருக்கு அனுப்புவதற்காக நிவியும், நிருவும் படம் வரைந்தார்கள். 

நிவேதன் சுமாராகவும், நிருபன் ரொம்ப சுமாராகவும் வரைந்தார்கள். 

இதில் நிருபன் வரைந்ததை பார்த்து நிவி "இதை பார்க்கும் போது குப்பையில் போடணும் போல இருக்கு " என்று சொல்ல.. 

உடனே நிரு "சரி இந்தா நீயே போடு " என்று அவன் கஷ்ட பட்டு வரைந்த ஓவியத்தை கொடுக்க நிவி திருத்திரு ன்னு முழிக்க.... 🙂

கடைசியா நிவியின் ஓவியம் book ல வரும் போது Niru தன்னுடைய ஓவியம் வரல ன்னு feel பண்ணினான்..